உன்னை அறிந்தால் …!

Spread the love

உன்னை அறிந்தால் …!

எழுதாத பேனாக்கள்
இருந்தென்ன இலாபம் ..?
எதிருக்கும் புதிருக்கும்
இன்றென்ன கோபம் ..?

அறியாத அவை ஏறி
அவை என்ன முழக்கம் ..?
அனலாக தமை வைத்து
அவை என்ன உறக்கம் …?

நெஞ்சிலே உனக்கு
இன்றென்ன கலக்கம் …?
நெசமா உரைத்தாய் ..?
நெஞ்ச வரியில் வீக்கம் ….

கரையாத பனி என்றும்
கடல் வந்து சேராது …
கரை தேட முடியாது
கப்பல் கடல் ஓட முடியாது …

அது புரியா மனிதம்
அகிலம் வாழ் கூடாது …
அவை யாவும் தெளிந்தால்
அகிலம் உன்னை மறவாது …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/04/2019

Home » Welcome to ethiri .com » உன்னை அறிந்தால் …!

Leave a Reply