உன்னில் நான் என்னை நம்பு

உன்னில் நன் என்னை நம்பு
Spread the love

உன்னில் நான் என்னை நம்பு

காயம் கொஞ்சம் நீ தந்தால்
கண்ணீர் நான் தருவேன்
காலம் எல்லாம் நீ வாழும்
கவிதை யான் வடிப்பேன்

புத்தகத்தில் உனை புதைத்து
புது முகம் நான் தருவேன்
புயலாகி வீசி விடும்
புத்துயிர் நான் இடுவேன்

எழுத சொன்னால் நானும் கொஞ்சம்
ஏற்றே எழுதிடுவேன்
என் உயிரில் கலந்து விட்டால்
ஏணி நான் தருவேன்

மூச்சு தந்து உன்னை கொஞ்சம்
முன்னே வாழ வைப்பேன்
முன் பகலில் காயும் புடவை
போல உனை மடிப்பேன்

காட்டு வழியில் நீ நடந்தால்
காவல் நான் வருவேன்
கை தொழும் கடவுளாக – உன்
கண்ணில் நான் இருப்பேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-08-2022

Leave a Reply