உண்மை சொல்
மூச்சு முட்ட மூச்சு முட்ட
முன்னே வந்து நிற்கிறாய்
முத்தத்தாலே உன்னை தைக்க
முன்னே ஏனோ ஊந்துறாய் ..?
ஆலயத்தின் சாமிகளாய்
ஆடை இன்றி நிற்பதா ..?
இயற்கை தந்த பேரழகை
இயமனுக்கே விற்பதா ..?
ஆசைகளை தூண்டி விட்டு
அருகில் வந்து இரசிக்கிறாய்
அந்தரத்தில் தவிக்க விட்டு – ஏன்
ஆராத்தி எடுக்கிறாய் ..?
கலைந்து போன கூந்தலில்
கை வைத்து போனது யார்
கட்டி வைத்த பேரழகை
கடத்தி இன்று விற்றது யார் ..?
விற்பனைக்கு சந்தையில
விண்ணிலவை வைத்தது யார் ..?
விவரமாக சொல்லி விடு
விசாரணைக்கு வருகிறேன் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 05-10-2021