இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
Spread the love

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்

இஸ்ரேல் போர் விமானம் மற்றும் யுத்த டாங்கிகள் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் ,பாலஸ்தீனம் காசா பகுதியில் வசித்து வந்த மக்கள் 165 பேர் பலியாகியும் 280 பேர் காயமடைந்துள்ளனர் .

காந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர கொலை வெறி தாக்குதலில் ,இந்த பாரிய உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

காசா போராளிகள் நடத்தி வரும் உக்கிர தாக்குதலில் பல்லாயிரம் இராணுவத்தை இழந்து தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அதன் போர் விமானங்களை பயன் படுத்தி ,பாலஸ்தீனம் காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி மக்களை கொன்று வருகிறது .

103 நாட்கள் கடந்து இடம்பெறும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இதுவரை 25.000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியும் ,60.000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்

இடைவிடாது தொடரும் தாக்குதலினால் காஸாவின் எழுபது சதவீததிற்கு மேற்பட்ட வீடுகள் ,கட்டடங்கள் ,என்பன முற்றாக அழிக்க பட்டு பாலஸ்தீனம் அழகு இழந்து கண்ணீரில் தவிக்கிறது .

ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் போர் வெறியும் பழிவாங்கும் இனவெறியுமே இந்த இஸ்ரேல் காசா போர் நீடித்து செல்ல காரணமாகிறது .

பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் பாரிய தோல்வியை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதால் ,தனது அரசாட்சி கவிழ்க்க பட்டு வீடு செல்லும் அபாயத்தில் இஸ்ரேல் பிரதமராக விளங்கும் நெதன்யாகு உள்ளதினால் ,அதற்கு முன்னதாக பாலஸ்தீனம் காசாவை சுடுகாடாக்கிட முயன்று வருகிறார் .

அதன் ஒரு அங்கமே இந்த அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதல் மக்கள் படுகொலை ,அழிப்பும் காணபடுகிறது .

வீடியோ