இன்றே இறந்து விடு ….!

Spread the love

இன்றே இறந்து விடு ….!

குண்டு வீசி குருதி குடித்தாய்
குரல் வளை நடுங்கிறதா – உன்
குலமே அழிகிறதா
கூண்டு சிரிக்கிறதா

பயந்தார் என்றே
பகிடிகள் செய்தாய்
பழிகள் துரத்திறதா – இன்று
பகமை விரட்டிறதா

கெஞ்சி அழுதார்
கேளிக்கை செய்தாய்
கேடு தெரிகிறதா – இன்று
கோட்டை சரிகிறதா

ஆடிய காவடி
அத்தனை மாறினர்
அடடா இரத்தம் கொதிக்கிறதா – இன்று
அடக்க முடியலையா

வாலை ஆட்டியே
வாசல் வந்தவர்
வாயில் மிதிக்கிறதா – அட
வார்த்தை தெறிக்கிறதா

கொள்ளை அடித்தவர்
கோட்டை பிடித்தவர்
அரியணை சாய்கிறதே
அவலம் தெரிகிறதே

இதுவரை விதைத்த
இன்னல் துரத்திட
இன்றேன் அழுகின்றாய் – ஏன்
இறந்திட மறுக்கிறாய் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-04-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply