ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்

Spread the love

ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல, மீயாங்கொல்ல காட்டு பகுதியிலிருந்து

அதிசக்தி வாய்ந்த 130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மற்றும் நாட்டுத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்

தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து காகித ஆலை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ளவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச்

செய்யும் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன், கடந்த சில தினங்களாக இவ்வாறான கைவிடப்பட்ட

வெடி பொருட்களை வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மீட்டு செயலிழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply