message
We have 210 guests and one member online
தமிழ்ச் செய்திகள்
ஆங்கிலச் செய்திகள்
தமிழ் சஞ்சிகைகள்
இணைய தளங்கள்
நடிகைகள்
4ம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட (இ)ரகசியங்கள்! இது வரை வெளி வராத மர்மங்கள்!
Published on Wednesday, 07 December 2011 02:09 Hits: 9253
ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளி வராத மர்மங்கள்!
இராணுவம் இப்போது முன்பை விட தீவிர வெறியோடு புலிகளின் வவுனியா நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கங்கணம் கட்டத் தொடங்கியது. விமலன் வவுனியா வைரவப் புளியங்குளம் வீதியூடாக வீதிச் சோதனை நடவடிக்கையின் நிமித்தம் (ரோந்து) செல்லும் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்டார்.வவுனியா வைரவப் புளியங்குள குளக் கட்டிற்கும் கீழ்ப் பகுதியில் நெல் வயல் அமைந்திருக்கிறது. நெல் வயலின் பின்னே அம்மன் கோவில் ஒன்று உள்ளது. விமலன் தன் திட்டத்தினைச் செயற்படுத்தும் நோக்கோடு அம்மன் கோவிலடிக்கு வந்தார். நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது நிரூபனின் நாற்று தளத்தில் வெளியாகும், ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளி வராத மர்மங்கள் தொகுப்பின் ஒன்பதாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும்.
புலிகள் கையாண்ட தந்திரோபாயங்கள்! பாகம் 01 பாகம் 02 பாகம் 03 பாகம் 04 பாகம் 05 பாகம் 06 பாகம் 07 பாகம் 08 பாகம் 09 கிளைமோர்த் தாக்குதலுக்கு ஏற்றவாறு குளக்கட்டின் மறு கரையில் கிளைமோர்க் குண்டினைப் பொருத்தி விட்டு வயல் வெளிக்குப் பின் பக்கமாக, பண்டாரிக் குளம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு அருகாக காத்திருந்து, இராணுவம் குளக்கட்டின் மேற் பக்கத்திற்கு வரும் போது ரிமோட் கான்ரோல் (Remote Control) மூலம் வெடிக்க வைக்கலாம் எனக் காத்திருந்தார் விமலன். விமலனுக்கு அப்போது இராணுவத்தினர் பின் பக்கத்தால் வருவது தெரிந்திருக்கவில்லை. விமலன் குளக்கட்டின் மறு கரையினைக் கண்காணித்துக் கொண்டிருக்கையில் இராணுவத்தினர் பண்டாரிக்குளம் விபுலானந்தா மகாவித்தியாலப் பக்கமிருந்து வந்து விமலனை அண்மித்த (நெருங்கிய) போது தான் ஆமி தனக்குப் பின்னே நிற்கும் விடயம் விமலனுக்குப் புரிந்தது.
இப்போது ரிமோட் கான்ரோலை ஒளிக்க முடியாத நிலமை. தான் நிற்கும் இடத்திலிருந்து இராணுவத்தினரைச் சுடுவதனை விட கழுத்தில் கட்டியிருந்த சயனைட் குப்பியினைக் கடித்து உயிர் விடுவதே மேலேனக் கருதி தன் உடலை அசைத்த விமலனின் வலது காலை இராணுவ வீரன் ஒருவனின் துப்பாக்கித் தோட்டா பதம் பார்த்தது. இப்போது ஓடக் கூட முடியாத நிலையில் விமலன் பண்டாரிக்குளம் அம்மன் கோவில்ப் பகுதியில் சரிந்து விழுந்தார். விமலனின் காயப்பட்ட உடலைத் தம் வசப்படுத்திய இராணுவத்தினர் வாகனத்தில் ஏற்றி அவரது உடலை அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். விமலனுக்குச் சிகிச்சையளித்து அவரது காலில் உள்ள காயத்தினை மாற்றிய பின்னர் வவுனியா ஜோசேப் இராணுவ முகாமிற்கு விமலனை அழைத்துச் சென்றனர் இராணுவத்தினர்.
அங்கே வைத்து சித்திரவதை - துன்புறுத்தலுக்குள்ளாக்கி அவரிடமிருந்து வவுனியாத் தாக்குதல்கள் பற்றி அறிய முனைந்தார்கள் இராணுவத்தினர். விமலனுக்குச் சித்திரவதை செய்து உண்மைகளை அறிவதில் முனைப்புடன் செயற்பட்டார் இராணுவப் புலனாய்வுத் துறையினைச் சேர்ந்த தமிழ் அதிகாரி சத்திய வரதன் அவர்கள். (சத்திய வரதன் பற்றி இத் தொடரின் மூன்றாம், நான்காம் பாகங்களில் குறிப்பிட்டுள்ளேன்) இராணுவத்திடமிருந்து தண்டனைகளையும், துன்புறுத்தல்களையும் விமலன் எதிர் கொண்டாலும், தன் இன மானத்தினை விற்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் விமலன். இறுதியில் விமலனை இராணுவத்தினர் தம்மால் இயன்ற மட்டும் அடித்துத் துன்புறுத்திப் புலிகள் அணியினரின் வவுனியாப் பகுதி நடவடிக்கைகள் பற்றி அறிய முயன்றார்கள்.
விமலனின் மன உறுதி காரணமாக தகவல்கள் எதனையும் பெற முடியாத இராணுவத்தினர் தம் குரோதத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் பலமாகத் தாக்கி விமலனின் உடலில் பலத்த காயங்களை ஏற்படுத்தினார்கள். இப்போது வவுனியாப் பகுதியில் நெருப்பும், டக்ளசும், வேந்தனும் மாத்திரமே எஞ்சியிருந்தனர்.ஆரம்பத்தில் தலமைப் பீடம் வவுனியாவிற்கு அனுப்பியவர்களில் 10 பேரை மீளவும் வன்னிக்கு அழைத்தது. மெது மெதுவாக வவுனியா நகர் மீளவும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.வவுனியாவில் புலிகளின் தாக்குதல்களை வழி நடத்திய விமலன் இராணுவத்தினரிடம் மாட்டிக் கொண்ட காரணத்தினால் புலிகள் அணியினரின் செயற்பாடுகளை வழி நடத்துவதற்கு தளபதிகள் ஏதுமற்றி நெருப்பின் தலமைத்துவத்தின் கீழ் புலிகள் வவுனியாவில் செயற்படத் தொடங்கினார்கள்.
வன்னிக் கள முனையில் ஓர் சமரினை ஆரம்பிக்கும் நோக்குடன் இராணுவத்தினரால் ஆயுத தளபாடங்களை வவுனியாவிலிருந்து ஓமந்தைப் பகுதி நோக்கி நகர்த்தும் நடவடிக்கைகளுக்கு புலிகளால் ஏற்படுத்தப்பட்ட உள்ளிருந்து ஊடுருவித் தாக்கும் தாக்குதல்கள்; மறைந்திருந்து தாக்கும் செயற்பாடுகள் அனைத்துமே 2007ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சிறிது சிறிதாகக் குறைந்திருந்தன. கூமாங்குளத்தில் காலில் காயப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வன்னிக்கு அனுப்பப்பட்ட அமலன் இப்போது சிகிச்சை முடிந்து புதிய சில திட்டங்களோடு வவுனியாவிற்கு வந்தார். அந் நேரம் தலமைப் பீடம் நெருப்பினை வன்னிக்கு அழைத்தது. இராணுவம் வவுனியாவிலிருந்தா, மன்னாரிலிருந்தா வன்னிக்குள் தன்னுடைய படை நடவடிக்கையினை ஆரம்பிப்பது என குழம்பிக் கொண்டிருந்தது.
இனி இராணுவத்தினரின் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு அமைந்தது என்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.
radio
அதிகம் படிக்கப்பட்டவை
- இசை பிரியாவின் படுகொலை புதிய அதிர்ச்சி 10 படங்கள்
- நடிகை நடிகர் மாரின் காம கூத்துக்கள் -அதிர்ச்சி படங்கள்
- சீரழியும் இந்திய பண்பாடு பொண்ணுகள் பொடியள் காம களியாட்டம் !
- மண்டை வெட்ட பட்ட நிலையில் சடலமாக கிடக்கும் போராளி யார் ?
- நச்சு குண்டு வீசி மக்கள் படுகொலை .இதுவரை வெளிவராத அதிர்ச்சி 12நிழல் படங்கள் !
- நடிகை குளிப்பதை எட்டி பார்த்த நடிகர் !
- 1கற்பழிக்க முனைந்த ஆணின் மண்டை உடைத்து அனுப்பிய சிறுமி -திகில் சண்டை video !
- கோடாலியால் தலை வெட்ட பட்ட நிலையில் போராளியின் அதிர்ச்சி படம் !
- ஒரு நடிகையின் அம்மண வீடியோ !
- நச்சு குண்டு தாக்குதலில் -தளபதி தீபன் படு கொலை NEW போட்டோ
- கைகள் கட்ட பட்டு சுட்டு கொலை செய்ய பட்டுள்ள போராளிகள் !
- அரை நிர்வாணத்தில் ஆடும் பெண்கள் !
- இளம் பெண் துரத்தி படுகொலை அதிர்ச்சி காணொளி !
- இறுதி யுத்த படுகொலை புதிய அதிர்ச்சி படங்கள்
- புலிகள் அமைப்பின் தளபதி பொன் தியாகம் றோவின் பிடியில் !
- நடிகர் நடிகை காதல் சண்டை -பகிரங்க டிவி ஒளிபரப்பு !
- கோத்தாவின் உத்தரவில் படுகொலை செய்ய பட்ட மக்கள் !
- கடல் புலிகள் வர்ணத்தில் சீறி பாயும் சீனா போர் கப்பல் !
- விபச்சாரம் செய்ததாக சிக்கியுள்ள நடிகை கரோலின் குறித்த பரபரப்புத் தகவல்கள்!!!
- நடிகர் நடிகைகள் சண்டை -இந்த கூத்த பாருங்கோ !


































