Search Results for: லொறி
கோழி லொறிமீது மோதிய காட்டுயானை
கோழி லொறிமீது மோதிய காட்டுயானை
கோழி லொறிமீது மோதிய காட்டுயானை ,தம்புள்ளை ரிடியெல்ல பகுதியில் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மீது காட்டு யானை மோதியதில் லொறி
கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில்
கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில் இறந்து கிடந்ததாக வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.
லொறியின் ஓட்டுநர் காயமடைந்து தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காட்டு யானை
லொறி தம்புள்ளையிலிருந்து பகமுன நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று சாலையைக்
கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக லொறியில் பயணித்த ஒரு தொழிலாளி தெரிவித்தார்.
காட்டு யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து சாலையை விட்டு விலகிச் சென்றதாகவும் அவர் கூறினார்.
விபத்தில் ஏராளமான கோழிகள் இறந்திருப்பது தெரிந்தது. உயிருடன் இருந்த மற்ற கோழிகளும் சாலையில் கிடந்தன
லொறி பவுசர் மோதல் இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி சம்பவம் பெரும் பரபரப்பை தெற்கு அதிகமாக சாலையில் ஏற்படுத்தியுள்ளது. Lorry-bowser collision leaves two dead
அதி வேகமாக பயணித்த லொரி அண்ட் பவுசர் என்பன மோதியதில் ,லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக களமுனை செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது Both vehicles are found overturned.
இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.இவ்வேளை பவுசரில் உள்ள கசிந்த வண்ணம் காணப்படுகிறது.
சாரதிகளின் வீதி விதிமுறைகள் மீறல் மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வீதி விபத்துகளில் ஏழு பேர் பலி Seven people killed in road accidents
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .
மேலும் 6 க்கு மேற்பட்டவர்கள் நாள்தோறும் காயமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .
இவ்வாறான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

- உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பில் சேர அரசாங்கம் முனைப்பு

- இராணுவ ஆட்சியின் கீழ் 1990 சுவா செரியா ஊழியர்கள் போராட்டம்

- முதியோர் இல்லத்தில் தீ 13பேர் பலி

- வெள்ளத்தில் மிதக்கும் போகும் நகரகங்கள் எச்சரிக்கை

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ,மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில் லொறி சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.
இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கிப் போயுள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்த 75 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல்
மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல்
மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல் பலர் காயம் இலங்கையில் நடந்த அதி உச்ச கோர விபத்தாக இந்த பேருந்து நூறு மோதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
மன்னர் ஜான் பிரதான வீதி கல்யடி பகுதியில் காலைத்து நின்ற பேருந்து மீது வேகமாக வந்த கஞ்சனூர் சாரதியின் கட்டுப்பாட்டு இழந்து மோதி தள்ளியது.
இதன் பொழுது பேருந்து பலத்த சேதமடைந்து நிலையில் காணப்படுவதுடன் அதற்கு அருகில் இருந்த ஊந்துருளி என்றும் கடுமையான சேதமுத்து.
இந்தப் பேருந்து லொறி மோதல் விபத்தில் தற்பொழுது ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் மன்னார் ஆடை தொழிற்சாலையின் பணியாளர்களே அதிகம் என தற்போது இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த அனைத்து பயணிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி மதிக்கப்பட்டு ,சிகிச்சை பெற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகளின் அலட்சிய போக்கும் வீதி விதிமுறைகளை மறப்பதனால் இவ்வாறான கோர விபத்துக்கள், நாள்தோறும் இலங்கையில் இடம் பெற்று வருகிறது.
இலங்கை வீதி விபத்து தொடர்பாக நாள்தோறும் அதிகமான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
நாள்தோறும் இடம்பெறும் இவ்வாறான கோர விபத்து சம்பவங்களினால், நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து வருகின்றனர்.
சாலையோரங்களில் காத்திருக்கின்ற காவல்துறையினர் கண்காணிப்பு உள்ள பொழுதும் ,அது கடந்து இவ்வாறு விபத்துக்கள் தொடர்வது இலங்கையில் உலுப்பி வருகிறது.
இது நடமாடும் சுதந்திரத்தை பாதிக்கின்ற ஒரு செயலாகவும் ,பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்ற காலமாகவும் மாறி இருக்கின்றது.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

- உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பில் சேர அரசாங்கம் முனைப்பு

தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி
தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி
தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி ,பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி ஒரு வயது ஏழு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை குழந்தையின் தந்தை பின்னோக்கி இயக்கிய போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய 39 வயதான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
பஸ் லொறி விபத்து 15பேர் காயம் ,ஹொரணை – ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சிறிய ரக லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில், மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்
லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்
லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .
வாகன சாரதிகள் சாலை கட்டுப்பாடுகளை மறந்து வாகனம் , போதை தூக்கத்தில் வாகனத்தை ஒட்டி செல்வதால் நாள் தோறும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன .
வீதிக்கு வீதி போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் ,இவ்விதம் இடம்பெறும் வாகன விபத்துக்களை தடுக்க முடியவில்லை .
காட்டன் பகுதியில் புண்ணாக்கு ஏற்றி சென்ற லொறி ஒன்றே சாலையை விட்டு தடம் புரண்டது விபத்தில் சிக்கியது .
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு ,கடுவலையில் திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
வத்தளை பகுதியில் இருந்து திருடப்பட்டு ஓட்டிச் செல்லப்பட்ட லொறி ஒன்று கடுவெலயில் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு இணங்கத் தவறியதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
நொரோச்சோலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு மரக்கறி ஏற்றிய லொறி வத்தளையில் உள்ள தேநீர் கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, சாரதி தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார்.
இதன் போது சந்தேக நபர் வாகனத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியொன்று லொறியை பின்தொடர்ந்து சென்றது, ஆனால் அதனை நிறுத்த முடியாமல் போனதால், வாகனத்தின் GPS கண்காணிப்பு அமைப்பு மூலம் அதிகாரிகள் தலையிட்டனர்.
பொலிசார் முதலில் வெல்லம்பிட்டிய பகுதியில் லொறியை நிறுத்த முற்பட்டனர், ஆனால் சந்தேக நபர் அவர்களின் உத்தரவை மதிக்கவில்லை.
பல பொலிஸ் குழுக்கள் பின்னர் வாகனத்தை பின்தொடர்ந்தன, இது தலாஹேன மற்றும் கடுவெல ஆகிய இரு பகுதிகளிலும் பல துப்பாக்கிச் சூட்டுகளுக்கு வழிவகுத்தது.
பொலிஸாரின் முயற்சிகள் இருந்தபோதிலும், சந்தேக நபர் பிடிபடுவதைத் தொடர்ந்து தப்பித்துக்கொண்டார், துரத்தலின் போது இரண்டு கார்கள், ஒரு பேருந்து மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தால் இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் பின்புற வாயில் ஒன்று சேதமடைந்துள்ளது.
தப்பிச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில், அதிகாரிகள் லாரிகளைப் பயன்படுத்தி கடுவெல நகரில் சாலையை மறித்து சாலைத் தடுப்புகளை அமைத்தனர்.
எனினும் சந்தேகநபர் இந்த இடத்தில் திரும்ப முயன்றுள்ளார். அந்த நேரத்தில், காவல்துறை அதிகாரிகள் லொறி மீது கூடுதல் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இறுதியில் கடுவெல நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டது.
களனியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி ,மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று நானுஒயா டெஸ்போட் பகுதியில் விபத்துக்குள்ளாகி குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மஹியாங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலைக்கு மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்றே திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதியின் போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது. எனினும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணல்களை அகற்றி போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
விபத்தின் போது லொறியின் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் , தெரிவிக்கப்படுகிறது.
பாதசாரி மீது மோதிய லொறி
பாதசாரி மீது மோதிய லொறி
பாதசாரி மீது மோதிய லொறி ,இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பானந்துறை வீதியின் திவுல்பத பிரதேசத்தில் இரத்தினபுரி திசையிலிருந்து இங்கிரிய நோக்கி பயணித்த லொறியொன்று வீதியின் குறுக்காக பயணித்த பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி இங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இங்கிரிய – அக்கர 20 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் ஹொரணை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து
மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து
மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து ,நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக
வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2 மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அருகில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்
இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான வாகனங்கள் மாத்திரம் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸாரும் இணைந்து இந்த
வீதியின் போக்குவரத்து தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஏராளமான பதாதைகள் வீதியில் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டள்ள போதிலும் சட்டங்களை மீரும் சாரதிகள் இந்த வீதியில் ஐந்து தொன்களுக்கும்
அதிக எடையுள்ள வாகனங்களைச் செலுத்துவதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக
வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி ஐவருக்கு காயம்
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி ஐவருக்கு காயம்
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு அனுராதபுரம் ஏ28 பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பண்டாரகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கி மாம்பழம் ஏற்றிச்செல்ல வந்த சிறிய லொறியும், அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி வீதிகளின் ஓரங்களில் பதிக்கும் (இன்டர்லாக் கற்களை) ஏற்றிச் சென்ற பெரிய லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிய ரக லொறியின் சாரதியின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம் இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை – கொங்கொடியா பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து இராகலை பொலிஸா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது ,மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த லொறியானது, பொலிஸாரின் சமிக்ஞைகளை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, வாகனத்தின் ஒரு டயர் மீது துப்பாக்கியால் சுட்ட பிறகு வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன்போது, லொரி சோதனையிட்டபோது, 17 மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதற்கமைய, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி ,பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் நேற்று (6) இரவு வேனும் லொறியும் மோதியதில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த வேன், அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்தவர்கள் எனவும், அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்லும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக வந்த வேன் லொறியின் பின்புறம் மோதியதில் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியர் உயிரிழந்தார்.
காயமடைந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சாரதி உட்பட அனைவரும் படுகாயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லொறி மற்றும் சாரதி பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, மாத்தறை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் பின்னதுவயில் இருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
பின்னதுவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யானை லொறியுடன் மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி ,திருகோணமலை தவலகம் பிரதேசத்தில் வைத்து லொறி என்றுடன் மோதி யானை ஒன்று பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த லொறியுடன் அந்த வீதியை குறுக்கறுத்து யானை மோதுண்டு இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹந்தளாய் காட்டுப்பகுதியில் வசித்து வந்த யானை வீதியை கடக்க முற்பட்ட பொழுது ,வேகமாக பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லொறியும் பலத்தை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதிகளில் தளம் அமைத்து தாயகம் அமைத்து போராடி வந்த விடுதலைப்புலிகள், அந்த மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் ,தற்பொழுது தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் யானைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
மக்களை அச்சுறுத்த முகமாக தற்பொழுது அங்கு யானைகளை இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதனாலயே இந்த யானைகள் தற்பொழுது வீடுகளுக்குள் வந்து மிகப்பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை அடித்து நொறுக்குவது மற்றும் வாகனங்கள் மீது தாக்குதலை நடத்துவது ,மற்றும் பயன் தரும் மரங்களை முறித்து அழிப்பது என்பது போன்ற விடயங்களை இந்த யானைகள் மேற்கொண்டு வருகின்றன .
நிலையில் இவ்வாறான வீதி விபத்துகளும் யானைகள் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்,
வத்தளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சார்யன் தர அதிகாரி ஒருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் சக்கரத்தின் காற்றை புடுங்கிய நிலையில் அந்த காணொளிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்தக் காட்சி வைரலாகி வருகின்ற நிலையில் போலீஸ் அதிகாரி சட்டவிரோதமாக லாரியின் காற்றை புடுங்கிய சம்பவம் காணப்படுவதால், உடனடியாக அவரைப் பணியில் இருந்து நீக்கி எழுதாக இலங்கை காவல்துறையின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு சேவையாற்ற வந்த காவல் துறையினுடைய இந்த நடவடிக்கை சற்று வித்தியாசமாகவும் முரண்பாடான நிலையில் காணப்படுவதால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
லஞ்சம்வாங்க முயன்று அது வழங்காத நிலையில் ,இவ்விதம் காற்றை பிடுங்கிய காட்சிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தற்பொழுது இலங்கையில் இந்த காணொளி வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திட்டமிடப்பட்டு வாகன ஒன்றில் கஞ்சா வைத்து லஞ்சம் பெறமுற்படும் காவல்துறை அதனை வழங்காதவர்களுக்கு இவ்வாறான அடாவடி நடவடிக்கை ஈடுபட்டு காற்றை பிடுங்கிதான தகவல்களும் வெளியாகி உள்ள நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வந்த காவல்துறையில் இந்த அடாவடி நடவடிக்கை என்று தெரிந்தும் இவர்களது மூளைகள் என்று மாறும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியுடன் பேருந்து ஒன்று திடீரென மோதியதில் ,எட்டு பேர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா காவல்துறைந்த தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேளையில் லொறு என்றுடன் சொகுசு பேருந்து திடீரென மோதியதிலேயே எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் உடனடியாக
அமைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த யாவரும் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன விபத்து தொடர்பான விடயம் அவரது உறவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது போலீசார் ஆரம்பித்து வருகின்றனர்.
இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் மக்கள் பலியாகி காயமடைந்து வருகின்றனர் சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த வீதி விபத்துக்கள் இடம் பெறுவதற்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வழி போக்குவரத்து விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க மறந்து போட்டி போட்டு வாகனங்களை ஓட்டி செல்வதாலும் முடக்க திரும்புகின்ற பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்த தவறுகளால்
அதனாலயே இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்பொழுது பேருந்து ,
பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் எடுத்து காண்பிக்கின்றன.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு
கோர விபத்து லொறி சேதம்
மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு
மின்கம்பத்துடன் லொரி என்று மோதியதால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி செய்திகள் தெரிவிக்கின்ற மட்டக்களப்பு கல்பனை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த
திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியது இதன் பொழுது நுரையின் முன்னரங்க பகுதிகள் கடும் சேதம் அடைந்துள்ளனர்
விழுந்த நிலையில் காணப்படுகின்றது இதனால் அந்த பகுதி மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மின்சார சீர்திருத்த பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எரிபொருளை ஏற்றுச்சென்ற ஒரு பவுசரை இந்த மின்கம்பத்துடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் தேவாதிகமாக டவுசர் தீ பிடித்து சிதறாத காரணத்தினால் இழப்புகள் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற அதிக விபத்தின் காரணமாக நாள்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் காரணமாகவே இந்த விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முழுசா தேர்வு தோழர்
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுப்பது எப்படி அதில் இருந்து மக்களை பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விழிப்புணர்வு நடவடிக்கை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதும்
இலங்கையில் இவ்வாறான வீதி விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் ஒரு வித துயரையும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.










































