மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு 7 – 8 மணியளவில் புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து ஊர்காவல் படையினரும் வீடுகளின் உறங்கிக்

அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணை

கொண்டிருந்தவர்களின் 45 அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென கடற்கரை பகுதிக்கு ஒதுக்கிக் சென்றுள்ளனர்.

விசாரணக்கொன அழைத்துச் சென்றவர்களில் சிலர் உயிர் தப்பிய உள்ள போதிலும் நள்ளிரவு வேளை பெண்கள் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன்

இவர்களது சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

உயிரிழந்தவர்களின் நினைவாக புதுக்குடியிருப்புபில் அமைக்கப்பட்டநினைவுத் தூபி முன்றலில்

உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு,மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்தப் படுகொலையில் 09 ஆண்கள் 08 பெண்கள் சிறுவர்கள் என17 படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த படுகொலைச் சம்பவம் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என இறந்தவர்களின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலி அதிகரித்த விபத்துக்கள்

புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலி அதிகரித்த விபத்துக்கள்

புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலியாகியுள்ளார் , முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வில்லிபுனத்தை சேர்ந்தவரே பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அதிகரித்த விபத்துக்கள் தொடர்பாக விசேட வீதி போக்குவரத்து கண்காணிப்பு நடத்த பட்டு வருகின்ற பொழுதும், சாரதிகள் அலட்சிய போக்கால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து சம்பவங்களில் சிக்கி நான்கிற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் .

இவ்வாறான புதிய விபத்து புள்ளி விபரம் மக்களை அலறவிட்டுள்ளது .

10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்
Posted in இலங்கை செய்திகள்

10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்

10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்

அபு அலா –

கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அபிவிருத்தி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் தேவைகளையறிந்து பல்வேறுபட்ட உதவிகளை இலங்கை காப்போம் நிறுவனம் வழங்கி வருகின்றது.

அதற்கமைவாக, திருகோணமலை – வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற 235 குடும்பங்களில் 25 குடும்பங்கள், சுமார் 10 வருங்களாக பாலமின்றி பல கஷ்டங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

இவ்விடயத்தை இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரனின் (திலீப்) கவனத்திற்கு கொண்டு

வரப்பட்டதையடுத்து உப்புவெளி பிரதேச சபையும், இலங்கை காப்போம் நிறுவனமும் இணைந்து பல இலட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்பட்ட பாலம்

(23) திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.

10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்

இலங்கை காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.ஆர்.பிரவினா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.எ.எஸ்.ரீ.ரத்நாயக்க மற்றும் காப்போம் நிறுவனத்தின்

நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின்

பாவனைக்கும் கையளித்து வைத்த அதேவேளை அக்குடும்பங்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.

கடந்த 10 வருங்களாக பாலம் ஒன்று இல்லாமல் இங்குள்ள 25 குடும்பங்களும், பாடசாலைக்குச் செல்லும் எங்களது பிள்ளைகளும் பல கஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்தோம். குறிப்பாக, மழை காலங்களில் சொல்ல முடியாதளவு பாரிய சிரமங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்துள்ளோம் என்று அங்கு வாழ்கின்ற குடும்பங்கள் தெரிவித்தனர்.

நாங்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து எங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றவர்களாகவும், இருப்பதற்கு ஒழுங்கான வீடுகளும் இல்லாத நிலைமையில்தான் வாழ்ந்து வருகின்றோம்.

எங்களின் நிலைமையை இலங்கை காப்போம் நிறுவனத்திடம் எடுத்துச் சொன்னபோது, அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து இப்பாலத்தை நிர்மானித்து இன்று எங்களின் பாவனைக்கு கையளித்து வைத்துள்ளனர்.

இப்பாலத்தை நிர்மானித்துத்தர உதவி புரிந்த அனைத்து உங்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.

இலங்கை காப்போம் நிறுவனம் இனமத மொழி வேறுபாடுகளுக்கப்பால் மக்களின் தேவைகளையறிந்து அவர்களால் இயன்றளவு உதவிகளை உடனடியாக வழங்கி வருகின்றதொரு நிறுவனமாக கடந்த சுனாமி அனர்த்தத்தின் பிற்பட்ட காலங்களில் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.விபுசன், வி.பாபுகாந், கிராம சேவகர் எம்.பிரசாந்தினி, உப்புவெளி பிரதேச சபையின்

தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிருவாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்தி சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்து பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்போது சிறுமி ஒருவர் சாதுரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.

வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு

    புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு

    மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில், நேற்று (26) மாலை, வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என்பவர் ஆவார்.

    குறித்த நபர், நேற்று (26) காலை 11.30 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

    சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

      Posted in இலங்கை செய்திகள்

      புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

      புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

      முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, பாரதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்க சென்ற மாணவர்கள் 24 பேரை குளவி துரத்தி குற்றியுள்ளது

      இதில் பாதிக்க பட்ட மாணவர்களை மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

      சிலர் மேலதிக சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

      Posted in இலங்கை செய்திகள்

      லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video

      லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video

      நேற்று சனிக்கிளை பிரிட்டன் -லண்டன் லூசியம் சிவன் ஆலய மண்படத்தில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய

      பழையமாணவர் ஐக்கியராச்சியம் ,என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்ய பட்ட கலை விழா நிகழ்வுகள் இடம்பெற்றன .

      இதில் ஆடல் ,பாடல் ,பேச்சு,கவிதை,என தமிழர் கலாச்சார விழுமியங்களை தொட்டு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன .

      மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரும் ,வைத்திய

      கலாநிதியுமான சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார் .

      மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது ,மிகவும் ஒன்றுபட்ட நிலையில் ,தமதுகுடும்ப

      நிகழ்வு போன்று ஒவொரு மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததை கண்டு வியந்தோம் .

      கடல் கடந்து வந்த பொழுதும் ,மொழியையையும் ,அதன் கலாச்சாரத்தையும் மறவாது தொடர்ந்து பேணி காக்கும்

      செயலில் இங்கு பிறந்து வளர்ந்த எமது சிறுவர்கள் ,இளையவர்கள் ஈடு பட்டதை காண முடிந்தது .

      தலைவர் ,செயலர் சிறப்புரைகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினரும் தமது உரையினை ஆற்றினார் ,

      அதில் சங்கத்தின் தோற்றம், நலன் ,மக்கள் ஒருமைப்பாடு,மற்றும் தேசிய அரசியல் தொடர்பாகவும் அவரது பேச்சு விரிந்து பரந்து சென்றது .

      மிக ஆளுமைகள் கூடிய நெறிப்படுத்திய நிகழ்வு இனிதே மறு மலர்ச்சியுடன் நிறைவு பெற்றது .
      அங்கு நிகழந்த நிகழ்வுகளின் காட்சி தொகுப்புகளில் சில ….

      • வன்னி மைந்தன் –
      லண்டனில் புதுக்குடியிருப்பு
      லண்டனில் புதுக்குடியிருப்பு
      https://www.facebook.com/461218597293517/videos/1586433034855445/
      இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி
      Posted in இலங்கை செய்திகள்

      இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி

      இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி

      இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி ,இரண்டு இடங்களில் நடந்த இரண்டு ரயில் விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

      மன்னார் – மன்னார் காவல் பிரிவின் புதுக்குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை

      தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

      உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு

      உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

      மேலும் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      கடுகண்ணாவை – கடுகண்ணாவை காவல் பிரிவின் கடுகண்ணாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை கண்டியிலிருந்து

      ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்

      பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

      இறந்தவர் அக்குரெஸ்ஸ, கனத்தொட்டையைச் சேர்ந்த 27 வயதுடையவர். சடலம் பேராதனை மருத்துவமனையின் பிரேத

      அறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் கடுகண்ணாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
      Posted in இலங்கை செய்திகள்

      பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்

      பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்

      பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய் ,விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு “ஒரு

      தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்

      தாயைப் போன்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் நடந்த தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார்.

      “உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எங்கள் உறவினர்களான ஈழத் தமிழ் மக்கள், தாய் பாசத்தைக் காட்டிய ஒரு தலைவரை இழந்து தவிக்கின்றனர்.

      எனவே, அவர்களுக்காகப் பேசுவது எங்கள் கடமை.”எனவும் அவர் குறிப்பிட்டார்.

      நாகப்பட்டினம் போன்ற பெரிய கடற்றொழில் சமூகம் உள்ள பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஓர் உணர்ச்சிகரமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

      இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய்

      2008 ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அரசியல்

      விமர்சகர்கள் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

      பிரபாகரனைப் புகழ்வதைத் தவிர, கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தனது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று விஜய் கூறினார். மேலும், எம்.கே. ஸ்டாலின் அரசாங்கத்தையும் விமர்சித்த அவர்,

      மீன்பிடிப் பிரச்சினைகளைத் தீர்க்க தனது கட்சி நீண்ட கடிதங்களை எழுதாது, மாறாக தீர்வுகளைத் தேடும் என்றும் கூறினார்.

      “கடற்றொழிலார்களின் உயிர்கள் முக்கியம். ஆனால் ஈழத் தமிழர்களின் உயிர்களும் எங்களுக்கு சமமாக முக்கியம்” என்று கூறி முடித்தார்.

      வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்
      Posted in இலங்கை செய்திகள்

      வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்

      வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்

      வெளியான சிங்கள படுகொலை விபரங்கள் ,எமது தமிழ் இனத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க அப்பாவி பொது மக்களை ஈனரக்கம் இன்றி கொலை கடத்தல் கற்பழிப்பு ரயர்களுக்குள் போட்டு அரை.குறை.உயிரோடும்

      கொலைவெறி கொண்டு ராணுவ புலனாய்வு மற்றும் ஊர் காவல் படையோடு இணைந்து நீங்கள் நடத்தியது எம்மால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது கடந்து போகவும் முடியாது.

      நீங்கள் எம் இனத்தின் மீது நடத்திய வெறியாட்டம் பின்வரும் பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

      பொத்துவில் 233கொலை👈
      வீரமுனை 13037கொலை👈
      காரைதீவு 789கொலை👈
      பாலமுனை 457கொலை👈


      அட்டபள்ளம்324கொலை👈
      விநாயகபுரம் 89கொலை👈
      அக்கரைப்பற்று 229கொலை👈


      திருக்கோயில் 148கொலை👈
      நயினாகாடு 95கொலை👈
      பனங்காடு 136கொலை👈
      மல்லீகைதீவு 567கொலை👈


      மல்வத்தை 390கெலை👈
      வளத்தாபிட்டி290கொலை👈
      கல்முனை 234கொலை👈
      மாளிகைகாடு கல்முனைக்குடி 789கொலை👈


      நற்பிட்டிமுனை 103கொலை👈
      சவளக்கடை 93கொலை👈
      சொறிக்கல்முனை145கொலை👈
      வெப்பையடி சந்தி 56கொலை👈
      வைக்கல ஓட்டு பேக்கரி 97கொலை👈


      வெல்லாவெளி சந்தி 59கொலை👈
      இந்தியன் ரெயின் பேஸ் பக்கம் 81கொலை👈
      பெரிய நீலாவணை 358கொலை👈
      பாண்டிருப்பில் 459கொலை👈
      துறைநீலாவணை 654கொலை👈


      மருதமுனை அரிசி ஆலையில் உள்ளே வேலை நிமித்தமாக இருந்த அப்பாவி
      தமிழர்கள் 65கொலை👈


      ஒந்தாச்சிமடம் மாரக்கேட்312கொலை👈 அருகாமையில்
      மகிழூர் பெரிய பாடசாலை வீதி வெட்டி துண்டு துண்டாக வீசி ப 450கொலை 👈
      பட்டிருப்பு சந்தி96 கொலை👈 களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் அருகாமையில் 387கொலை👈


      பேருந்து நிலையம் மாங்காடு 54.கொலை👈குருக்கள் மடம்58கொலை👈 புதுக்குடியிருப்பு. 567கொலை👈


      கிரான் குளம்.87கொலை👈 ஆரையம்பதி 480.கொலை👈
      ஏறாவூர் களுவங்கேணி 234.கொலை👈


      மாவடி வேம்பு.47கொலை👈 கிரான்123👈 புலி பாய்ந்த கல்36👈 சந்திவெளி123👈 பழைய.89கொலை👈 பொது நூலக வீதி


      வாழைச்சேனை781👈கொலை பாடசாலை வீதி
      சத்திர கொண்டான் 234 👈கொலை. பால் மீன்.123👈கொலை .திராய்மடு .598.கொலை👈


      புதிய முகத்துவாரம்( லைட்👈 office)👈✍👈
      சித்தாண்டி.287.கொலை பாடசாலையில்👈 தங்கி இருந்த மக்களை

      பலவந்தமாக வீதியில் அழைத்து கைகள் கால்கள்✍ கண்களை கட்டியும் கொன்று குவித்தது இந்த இன வெறி பிடித்த தேசம்.👈✍

      இவ்வாறு எல்லாம் அழிந்து விட்டு👈 குருக்கள் மடம் மட்டும் ஞாபகம் வருதா கக்கிம் ஐயா இனி அடி அத்திவாரம்✍ இருந்து எழுத தொடங்கினால் பின்னால் முன்னால் எல்லாம் மூட வேண்டிய நிலை வரும் ✍✍✍
      மிச்சம் கவனம் 👈👈

      இவை அனைத்தும் கிழக்கில் நிலை👈 கொண்டுள்ள முஸ்லிம் காடையர்களாலும் ஊர்வால் படையாலும்.அரங்கேற்றபட்டது

      எழுத்துக்கள் மீண்டும் எழுதுவோம்.✍✍

      தவறுகள் இருப்பின் தெரியப்படுத்தவும்…

      புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி
      Posted in இலங்கை செய்திகள்

      புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி

      புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி

      புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி ,விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு

      ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணி

      மந்துவில் பகுதியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

      முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் நேற்று (10) இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

      புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த நிலத்தடி பதுங்கு குழியின் நுழைவாயில்கள் அழிக்கப்பட்டன.

      2009ஆம் ஆண்டில், விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான முகாமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முகாமின் அளவு இரண்டு ஏக்கருக்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

      பொது மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த முகாம் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, கண்ணி

      வெடிகள் அகற்றப்பட்டு அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்புப் படையினர் நிலத்தடி பதுங்கு குழியை மண்ணால் மூடிவிட்டனர்.

      அந்த நேரத்தில், விடுதலை புலிகள் அமைப்பால் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில்

      பல்வேறு குழுக்களும் நிலத்தடி பதுங்கு குழியை தோண்ட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

      விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் வழிகாட்டுதலின் கீழ் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வு பணிகள்

      முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் தொல்பொருள் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பணிகளை கண்காணித்து வருகின்றனர்

      முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
      Posted in இலங்கை செய்திகள்

      முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி

      முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி

      பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

      இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால்

      உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்

      புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு,

      நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

      மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

      இன்று காலை உடையார்கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

      அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

      புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

      புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.

      அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

      அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில்,

      சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.

      அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது,

      மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

      அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

      முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்
      Posted in இலங்கை செய்திகள்

      முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

      முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

      முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார் ,முல்லைத்தீவு பகுதியில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்ட சடலத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

      முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

      சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.

      நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

      பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

      மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

      மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

      சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

      மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

      வவுனியாவில் வீடு தோற்க காரணம் இதுதான்
      Posted in இலங்கை செய்திகள்

      வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்

      வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்

      வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வவுனியாவில் வீடு தோற்க காரணம் என்ன என இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

      வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை

      தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

      என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

      வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

      அவர் மேலும் தெரிவிக்கையில்,

      முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை.

      விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும்.

      ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்

      எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது.

      இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

      பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.

      சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

      முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.

      இனவழிப்பு நடக்கவில்லை

      இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள்.

      கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என.

      நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.

      தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்பு

      40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும்.

      தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில்

      இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.

      சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம்.

      அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.

      முன்னாள் வடமாகாண சபை

      குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம்.

      இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம்.

      இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை.

      அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.

      அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி.

      முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.

      சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது.

      புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள்.

      அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

      முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
      Posted in இலங்கை செய்திகள்

      முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

      முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

      முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

      நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

      இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

      மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,

      புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

      மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

      வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

      தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

      கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

      இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

      எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

      புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி
      Posted in இலங்கை செய்திகள்

      புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி

      புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி

      புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி , பகதாரா சாதனை படைக்கப்பட்டுள்ளது.

      முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பெரிய சுபா தேர்தலில் இடம்பெற்ற முடிவுகள் பலியாக இருக்கின்றன, என்ற தேர்தல் முடிவுகளில் மகத்தான வெற்றிய இலங்கை தமிழர் அரசு கட்சியை பெற்றுள்ளது.

      அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் கட்சி ,11 ஆசனங்கள், அகில இலங்கைத் தமிழர் கட்சி 01 ஆசனம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 02வசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் , தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்கள் ,ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 01 ஆசனம் ,சுயேச்சை குழு 02 ஆசனம் .

      இவை முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.

      வடக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான சாதனையை பெற்று .எதிரிகளுக்கு சாட்டை அடியை கொடுத்து இருக்கிறார்கள். இது வரலாற்று சிறப்புமிகு சம்பமாக பார்க்கப்படுகிறது.

      முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை ஆண்டு விடலாம் என .கங்கணம் கட்டிய அனுர ஆட்சிக்கு ,சாட்டை எடுத்து வேட்டையை நடத்தி ஓட விடப்பட்டிருக்கிறது எங்களுடைய தமிழினம்.

      இந்த வாக்குகளை வாரி வழங்கிய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

      முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு
      Posted in இலங்கை செய்திகள்

      முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

      முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

      முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு ,பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

      மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக

      இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகிறது.

      அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு தேர்தல்கள் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையம், நட்டாங்கண்டல், ஜயன்கன்குளம், மல்லாவி , மாங்குளம், ஒட்டுசுட்டான்,

      புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கொக்கிளாய் , வெலிஓயா ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

      மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
      Posted in இலங்கை செய்திகள்

      மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்

      மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்

      மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய், இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில் பதிமூன்று வயது மகளின் மார்பகங்களை படம்பிடித்த தாயார் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார் .

      உறக்கத்தில் இருந்த 13 வயதுடைய மார்பகங்களை வீடியோ பிடித்த நிலையில் அதனை கண்ணுற்ற மகள் தனது சித்திக்கு தெரியப்படுத்திய நிலையில் ,32 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

      மகளுடன் பசித்து வரும் தாய்

      கணவனை பிரிந்து மகளுடன் பசித்து வரும் குறித்த தாயே தனது மகளை இவ்வாறு தகாத முறையில் வீடியோ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இவர் ஏன் இந்த வீடியோவினை பிடித்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணங்களை மேற்கொண்ட பொழுது அதற்குரிய காரணம் கண்டறியப்பட்ட நிலையில் தற்பொழுது தாயாரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .

      கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி

      கணவனை பிரிந்து வசித்து வாழ்ந்த மனைவி தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

      அதற்காகவே மகளின் மார்பகங்களை படம் பிடித்து சில நபர்களுக்கு அவர் அனுப்ப முனைந்தார் என்கின்ற விடயமே அதனூடாக தெரிய வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

      இலங்கையில் தற்பொழுது யுத்தம் முடிவுற்ற நிலையில் அதிகமான கைபேசிகள் பாவனையும் மது போதை போதை வாஸ்து பாவனைகள் தலைக்கேறிய நிலையில் இவ்வாறான அருவருப்பான சம்பவங்கள் ஆங்காங்க இடம்பெற்று வருவதாக சமூக நல அக்கறை உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர் .

      வளர்ந்து வருகின்ற காலத்தில் வளர்ந்துவிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் ஒருவித மனநிலையில் அல்லது மயக்க நிலையில் தமிழர் சமூகம் மாறி செல்கின்றதையும் இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

      இந்த சம்பவம் தற்பொழுது புது குடியிருப்பு பகுதியில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .

      தாயார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்தும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .

      மேஜர் திலகா வான்மதி
      Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

      மேஜர் திலகா / வான்மதி

      மேஜர் திலகா /வான்மதி

      மேஜர் திலகா /வான்மதி , வீர மண்ணின் நாயகியின் நினைவு நாள் இன்றாகும் .மேஜர் திலகா / வான்மதி
      வீரப்பிறப்பு: 11.10.1971 வீரச்சாவு: 12.06.1999
      சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

      நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

      சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை

      முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார்.

      நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

      அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான்.

      திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்பம்” என்றால் தெரியாதவர் யாருமில்லை எனலாம்.

      முதன்முதலில் ஆர்.பி.ஜி (RPG) இயக்கத்துக்கு கிடைத்தபோது, அதை இயக்கி “RPG அப்துல்லா” என அழைக்கப்பட்ட நகுலன் அண்ணாவின் தங்கையே திலகா அக்கா. 1

      சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சி

      987.10.05 அன்று சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சியில் வீரகாவியமாகி தீருவிலில் தீயுடன் சங்கமமாகிய பன்னிரு வேங்கைகளில் மேஜர் அப்துல்லாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

      யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி கணபதிப்பிள்ளை இணையர் 4 மகன்களையும் 4 மகள்களையும் பெற்றெடுத்தனர்.

      இப்படியாக திலகா அக்காவின் குடும்பம் மிக அழகானது. தந்தை ஒரு சிறந்த கட்டடத் தொழிலாளி. கடைசிக்கு முதல் செல்லப்பிள்ளையாக தர்சினி 11.11.1971 அன்று எம் மண்ணில் பிறந்தார்.

      சிறுபராயம் முதல் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்று வர்த்தகப்பிரிவில் தேறினார்.

      குண்டெறிதல், தட்டெறிதல் மேலும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். உதவிப்பந்து போடுபவராக இருந்து அவர் கையில் பந்து கிடைத்தால் அது வலையில் விழும் என்ற அளவிற்குத் திறமையாக ஆடுவார்.

      1991 ஆம் ஆண்டு ஏழாம் மாதம், யாழ் பழைய பூங்காவில் புதிதாக இணைந்த பெண் போராளிகள் கூடியிருந்தார்கள்.

      பெண் போராளிகள்

      உயரமாக நீண்ட கூந்தலுடன் “யார் அந்தப் பெண்” என்று தோழிகள் கேட்க, “மேஜர் அப்துல்லாவின் தங்கை” என்ற பதில் வந்தது. அடிமனதில் அடக்கி வைத்திருந்த தமையனின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

      ஒவ்வோர் பிரிவுக்குமுரிய மகளிர் பொறுப்பாளர்கள் தம் உதவிப்பணிக்குத் தேவையான புதிய போராளிகளை அழைத்துச் சென்றனர்.

      அங்கு பிரிந்த தோழிகள் மீண்டும் ஒன்பதாம் மாதம் 19 ஆம் அணி மகளிர் பயிற்சிப் பாசறையில் ஒன்றிணைந்து ஆரம்பப் பயிற்சியை நிறைவுசெய்து போராளி திலகாவாக உருவானார்.

      1992 ஆரம்பத்தில் நிதித்துறைக்கு முதன்முதலாக மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வர்த்தகம் படித்தவர்கள் (எழுத்து, நேர்முக) தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட, முதல் எட்டுப் பேரில் திலகா அக்காவும் இருந்தார்.

      கணக்காய்வுப் பணிக்கான கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. சிறிதுகாலம் செல்ல, வாணிபங்களுக்கான கணக்காய்வு பணியையும் ஆரம்பித்தனர்.

      ஆரம்பத்தில் திலகா அக்கா சேரன் வாணிபம், மருந்து பால்மா வாணிபங்களில் தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

      நிதித்துறையின் வழங்கல் பகுதி 1993 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு அதற்குரிய கணக்குமுறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு 1994 அளவில் திலகா அக்காவும் இன்னும் சிலரும் கணக்காய்வு செய்து வந்தனர்.

      தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை

      1993 நவம்பர் மாதம் பூநகரி சிறிலங்கா அரச படையினரின் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. அந்தவேளையில், தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் திலகா அக்காவும் இருந்தார்.

      ஆனால், அவர் தாக்குதலிற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் ஏமாற்றமடைந்தார்.

      கணக்காய்வுப் பணியுடன் யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் உயர் தேசியக் கல்வியையும் பயின்று வந்தார். அவர் குணநடை பற்றிக் கூறுவதாயின், உடனடியாக தெரியாதவர்களுடன் நன்றாகப் பழகமாட்டார்.

      பணியாளர்கள், மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பார். “பிழை என்றால் பிழை தான்” என்றும் எல்லோரும் பணியில் “நேர்மையாக” இருக்க வேண்டும் எனவும் எண்ணுவார்.

      ஆனால் நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு நெருக்கமாகப் பழகுவார். மனம் திறந்து கதைப்பார்.

      பகிடிகள் விடுவார். வெளிப்பார்வைக்குத்தான் அப்படிக் கடுமை போல் காட்டிக் கொள்வார்.

      மனதளவில் அன்பாகப் பழகுவார்

      ஆனால் எம்முடன் மனதளவில் அன்பாகப் பழகுவார். ஏனெனில் “ஒரு போராளியின் இதயம் மென்மையானது”.

      களமுனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஆழமாக இருந்தது.

      1995 ஆம் ஆண்டு (நடுப்பகுதி) யாழ்ப்பாணத்தை வன்கவரும் வெறியோடு வந்த சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் “புலிப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.

      அதற்குச் செல்லவென பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்த திலகா அக்காவும் தோழிகளும் வண்டியில் (pick-up) ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.

      மனதுக்குள் மகிழ்ச்சி. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு சமையல்கூடத்தில் இறக்கி விடப்பட்டு சீனிச்சம்பல் செய்வதற்காக வெங்காயம் உரிக்க விடப்பட்டனர்.

      (ஏனெனில் வெளிப்பணிகளும் போராட்டத்துக்குத் தேவையானது என்பதால் உரியவர்கள் இடப்படும் பணிகளை செய்ய வேண்டும்)

      யாழ் இடப்பெயர்வு இடம்பெற்று 1996 வன்னிப்பகுதி சென்று இழப்பீடுகள் தவிர்த்து கணக்குகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன.

      சளைக்காத திலகா அக்கா

      எதற்கும் சளைக்காது திலகா அக்காவும் சிறப்புற பணிகளைச் செய்தார். ஓயாத அலைகள் 1 தாக்குதல் பயிற்சிக்கு நிதித்துறை மகளிரிலிருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டனர்.

      ஆனால் அவர் அவ்வணியில் தெரிவு செய்யப்படாதது அவருக்கு மிகவும் வருத்தம் தான்.

      எந்த ஒரு நடவடிக்கையின் வெற்றிக்கும் பின்னால் வழங்கல் அணியின் திறமையான பங்களிப்பும் மிக முதன்மையானதாக இருக்கும்.

      வழங்கல் சரியாக உரிய நேரத்தில் சென்றடைந்தால் தான் உரிய அப்பணியைச் சிறப்பாக செய்யலாம். அந்தவகையில் முல்லைத்தீவு மீட்புப் போரின்

      வெற்றியும் அமைந்தது. அதன் பின் 1997 ஆம் ஆண்டு அளவில் அங்கு முதன்மையான சிற்றுண்டி வாணிபம் திறந்து வைக்கப்பட்டது.

      சிற்றுண்டி வாணிபங்களுடன் சமையல்கூடங்களுக்கான கணக்காய்வுப் பணியையும் திலகா அக்கா அணியினர் செய்து வந்தனர்.

      1998.06.10 அன்று சுதந்திரபுரம் மீதான சிறிலங்கா இராணுவத்தின் கொடூரமான மும்முனைத் தாக்குதலில் வழங்கல்பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா/அன்பு அண்ணாவும், வழங்கல் வாணிபங்களின் எமது

      கணக்காய்வுப்பகுதித் தோழி கப்டன் கலைமதி அக்காவும் அன்று வீரச்சாவடைந்தனர். மற்றும் பணியாளர்கள், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். திலகா அக்காவும் அந்தப் பேரிடியால் கலங்கித்தான் போனார்.

      கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி

      கப்டன் கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி, வழங்கல் பகுதி கணக்காய்வுப் பணியினை கப்டன் கலைமதி அக்காவுடன் இணைந்தே அவர் மேற்கொண்டு வந்தார்.

      நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தமையினால் இருவருக்குமிடையே ஆழமான நட்பும் புரிந்துணர்வும் காணப்பட்டிருந்தது.

      தனிப்பட்ட தனது சொந்தச் சிக்கல்களை சொல்லி மனம் விட்டுக் கதைக்கும் நெருங்கிய தோழியாக திலகா அக்காவுக்கு கப்டன் கலைமதி அக்கா விளங்கினார்.

      இவரது இழப்பானது திலகா அக்காவை மிகவும் தாக்கியது. அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டிருந்தார்.

      தொடர்ந்து புதுக்குடியிருப்புக்குச் சென்று கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்டு மீள தமது பணிகளைச் செய்துவந்தார்.

      ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்கா

      ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்காவின் முழுக்குடும்பமும் எமது போராட்டத்துக்கு உறுதுணையாகவும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தனர்.

      ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார், தங்கை என குடும்பமாக இடம்பெயர்ந்து வந்து எமது தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நின்று உரமூட்டினர்.

      விருந்தோம்பலிலும், கட்டட நிர்மாணப் பணிகளிலும், காப்பரண்களாக நிற்பதிலும் இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அவர்கள் என்றுமே சளைத்ததில்லை.

      போராளிகள் சாப்பிடுவதற்கென்றே எந்த நேரத்திலும் அங்கு அடுப்பங்கரை இயங்கிக் கொண்டிருக்கும்.

      “எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா” என்று என்றும் அவர்கள் எமது நினைவிலிருப்பார்கள்.

      1999 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முன்னரண்களுக்கான ஆளணி தேவை கருதி நிதித்துறை மகளிரணி பயிற்சிக்கு அணியமானார்கள்.

      திலகா அக்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேற அவரும் தெரிவு செய்யப்பட்டார்.

      பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் சென்று வந்தார். அவர்களுடன் உரையாடி, உண்டு மகிழ்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார்.

      திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம்

      திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

      வீட்டுக்குச் சென்று வந்துவிட்ட பின்பாக பயிற்சி முகாம் திரும்பி பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்.

      அதிகாலையில் ஓட்டப்பயிற்சியின் போது “முந்தி, கேட்கக் கேட்க சண்டைக்கு விடேல்லை, இப்ப வயது போட்டுது” என்று கூறிக் கொண்டும் விடாமல் “மூசி மூசி” ஓடுவார்.

      ஓய்வுவேளையில் பூப்பந்து, கரப்பந்து நன்றாக விளையாடுவார். தான் சண்டைக் களத்திற்கு சென்று தனது தமையன் போல சாதனை செய்ய வேண்டும் என்ற ஓர்மம் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது.

      அதைத் தொடர்ந்து களப்பயிற்சியை முடித்து நெடுங்கேணி முன்னரங்க காவலரண்களில் கடமையில் ஈடுபட்டார்.

      அன்று காவலரண்களுக்கான உணவு எடுத்துச் சென்று வழங்கும் முறை திலகா அக்காவினது.

      ஒவ்வொரு அரணாகக் கொடுத்துக் கொண்டு வருகையில் 34 வது அரண் வந்தது. தனது பாசறை மற்றும் கணக்காய்வு முகாம் தோழியிடம் “எனக்குக் களைப்பாக இருக்கிறது.

      இங்கு நிற்கிறேன்…அடுத்த அரண்களுக்கு உணவினைக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்.

      அவரும் “ஓம்” என்று கொண்டு சென்றார். திடீரென பக்கத்து அரண் நோக்கி சிறிலங்கா இராணுவம் பதுங்கித் தாக்குதலைத் தொடங்கியது.

      காப்பரணுக்கு துணையாக தாக்குதல்

      ஒரு பக்கம் லெப்.புகழினி நின்ற காப்பரண். உடனே திலகா அக்காவும் பக்கத்துக் காப்பரணுக்கு துணையாக தாக்குதல் நடந்த திக்கை நோக்கி பதிலடி கொடுத்தார்.

      எதிரியோ திசை திரும்பி திலகா அக்காவின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கத் தொடங்கிவிட்டான்.

      திலகா அக்காவும் தோழிகளும் மூர்க்கத்துடன் களமாடினார்கள். திலகா அக்கா தனது காப்பைக் கருத்தில் கொள்ளாது எதிரியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

      12.06.1999 அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத வகையில் எதிரியின் பி.கே (PK) ரவை அவரின் நெற்றியைக் குறிபார்த்தது.

      நெஞ்சுரம் நிமிர்ந்த தோற்றம்

      அசையாத மரம் போல நெஞ்சுரமும் நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் திலகா அக்கா எம் தாய் மண்ணை முத்தமிட்டார்.

      தோழிகள் கலங்கினர்.எப்படிச் சொல்வோம் அவர் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வோம் என்று பதறினர்.

      ஏற்கனவே துன்பத்திலிருந்த அவர்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு மாவீரரையும் எம் தாய்மண் சுமந்து கொண்டாள்.

      “போன வருடம் (1998) மாவீரராய் சென்ற அவர் தோழி (கப்டன் கலைமதி) தான் எங்கள் தர்சினியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்” எனத் தாய் புலம்பினார்.

      திலகா அக்காவின் வித்துடலைத் தூக்கிய போது அவரின் அந்த நீண்ட கூந்தலின் பின்னல் ஒன்று கழன்று தொங்கியது.

      நெஞ்சிலும குண்டு

      உடல் கவசத்தைக் கழற்றிய போது நெஞ்சிலும குண்டு பாய்ந்திருந்தது.

      எங்கள் நிதித்துறை வழங்கல்பகுதியின் கணக்காய்வு பகுதி அணிப் பொறுப்பாளர் மேஜர் திலகா/வான்மதியாக வீர வரலாறாகினார்.

      தமிழீழ நிதித்துறை கணக்காய்வுப் பகுதியின் ஒரு விருட்சம் வீழ்ந்தாலும் விழுதுகள் அவர் பெயர் சொல்லி தொடர்கிறோம்.

      -நிலா தமிழ்.

      (இந் நினைவுப் பகிர்வுக்கு தகவல் குறிப்புகள் வழங்கியவர் -விண்ணிலா)

      கப்டன் கலைமதி
      Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

      கப்டன் கலைமதி

      கப்டன் கலைமதி

      கப்டன் கலைமதி ,அது 1995 காலப்பகுதி. வெள்ளை மேற்சட்டையும் (shirt) கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை (first in commerce) படிக்கவென யாழ் நாவலர்

      வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம். எப்பொழுதும் எதற்கும் அணித்தமாக இருப்பது போல் அவருடைய எறும்பு

      போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது.

      கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற்பெயருடன் அக்காமார், அண்ணன்,

      தங்கை, தம்பிகள் கொண்ட இயல்பான குடும்பத்தில் பிறந்தவர் தான். தந்தை ஒரு புகைப்படக்கலைஞராக அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றை

      நடத்திவந்தார். மற்றவர்கள் போலவே கல்வி, வாழ்க்கை என்று அவரின் வாழ்வும் நகர்ந்தது. கணக்கியல் உயர் தேசிய கல்வியையும் (HNDA) நிறைவுசெய்து, நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

      காலத்தின் தேவைகருதி 1993 காலப் பகுதியில் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர், புரட்டாதி மாதம் தனது ஆரம்பப் பயிற்சியை மகளிர் பயிற்சிப் பாசறையில் 27ஆம் அணியில் “சுகி” முகாமில் மேற்கொண்டார்.

      பயிற்சியில் ஓடும் போது அவருடைய ஒரு காலில் சுழிவு ஏற்பட்டது. அப்படியிருந்தும் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டதால் கால் எலும்பு முறிந்து விட்டது. அதனால் மிகுந்த இடர்ப்பட்டதுடன் துன்பத்தையும் அனுபவித்தார்.

      அதன் பின் 1994 பங்குனி மாதமளவில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கு அனுப்பப்பட்டார். சிறிது காலம் சிகிச்சையில் அவர் இருந்தாலும் கணக்காய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

      அங்கு தான் அவருடைய ஆளுமை வெளிப்பாடு தெரிய வந்தது. அத்துடன் வெளிவாரி வர்த்தக பட்டப் படிப்பையும் (first in commerce) அங்கிருந்தே தொடர்ந்தார்.

      நிதித்துறை வழங்கல் பிரிவின் வாணிபங்களின் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தார்.

      அவருடைய பணி நேர்த்தி அவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். தானும் நேரத்தை வீணடிக்காமல் மற்றவர்களையும் வீணடிக்க விடாமல் வேலை செய்வது அவரின் திறமை.

      வழங்கல் பகுதியில் இரும்புத் தொழிலகம், புடவை வாணிபம், கோல்சர் வாணிபம், தையல் தொழிலகம், அடுக்கணி வாணிபம் என பல வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை திறம்பட மேற்கொண்டார்.

      1995 ஐப்பசி மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தை வன்கவர்வதற்காக வான் தாக்குதல்கள்,

      எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதானல் அங்கிருந்து வெளியேறி, சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுப் பணிகள்

      தொடர்ந்தன. மீண்டும் தரை வழியாகவும் வான் வழியாகவும்bகரையோரத் தாக்குதல்கள் மூலமும் பகுதி பகுதியாக சிறிலங்கா இராணுவத்தினர் எமது ஊர்களை வன்கவர்ந்த வண்ணமிருந்தனர்.

      1996 பங்குனி மாத நடுப் பகுதியில் அங்கிருந்தும் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் சென்றபோதும் வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணி ஒழுங்கு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.

      ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் மனம் சோராமல் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நீண்ட தொலைவுக்குச் சென்றும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும் பணிகள் சீராக ஒழுங்கமைக்கப்பட்டன.

      அத் தருணத்தில் தான் இழந்த ஒன்றிற்காக இன்னொன்றைப் பெறுவதற்காக ஓயாத அலைகள்1 நடவடிக்கைக்காக மேலதிக தேவை கருதி நிதித்துறை மகளிர் அணியும் படையணிக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.

      கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு

      அதில் கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.பயிற்சியின் போது உடைந்து பொருந்திய காலுடன் மிகவும் சிரமப்பட்டார்.

      இருந்தபோதும், ஒருநாளும் பயிற்சிக்குப் பின் நின்றதே இல்லை. குறிப்பிட்ட எண்ணிக்கை முழு வட்டமும் ஓடி முடித்தே ஆக வேண்டும். அவரால் ஓட முடியாத நிலையில் நடந்தேனும் ஓட்டத்தினை நிறைவுசெய்வார்.

      இயலாவிட்டால் முகாமுக்குத் திரும்பச் செல்லுமாறு பணித்தாலும் போக மாட்டேன் எனக் கூறி பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வார்.

      தனக்குக் கிடைத்த களமுனைக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிட அவர் விரும்பவில்லை. சாப்பாடு எடுக்கும் முறை அணிக்குழுவில் அவருக்கு வரும்போது

      அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பதால் சாப்பாடு எடுக்கும் பெரிய சட்டியை (டாசர்) கீழே பிடித்துக்கொண்டு வர கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதனால் சட்டியை (டாசர்)

      தலையில் சுமந்துகொண்டு தாண்டித் தாண்டி நடக்க வெளிக்கிட்டு விடுவார். ஓயாத அலைகள் 1 வெற்றியடைய சத்ஜெய 1 நடவடிக்கையும் நடந்து முடிந்தது.

      மீண்டும் களமுனையிலிருந்து முகாம் திரும்பி தனது தொடர்ச்சியான பணியை மேற்கொண்டார். சிலவேளைகளில் நாங்கள் முகாமில் உணவு சமைத்தும் உண்பதுண்டு.

      அக்கா முட்டைப் பொரியல் சாப்பிட்டால்

      அப்போது கலைமதி அக்கா முட்டைப் பொரியல் சாப்பிட்டால் சவர்க்காரம் போட்டுக் கைகழுவ மாட்டார். ஏனென்றால் கையில் அடிக்கடி அதை மணந்து பார்த்து மகிழலாம் என்பார். அத்துடன் சமையற்கூடப் பகுதியில் சோறு கூட எடுத்து வரச் சொல்லிக்

      கூறுவார். ஏனென்றால் அதில் நீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சம் புளி எல்லாம் விட்டு பழஞ் சோறு குழைத்துத் தருவதற்கு தான். அவர் அவ்வாறு தரும் பழஞ்சோற்றின் சுவையோ தனிதான்.

      அவரை முகாமில் ஒரு மூத்த அக்கா போல் கருதுவார்கள். ஏனெனில் அறிவுரைகள் சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்தவர்.

      சக போராளிகளாயினும் பணியாளர்களாயினும் யாரையும் இலகுவில் பகைத்துக்கொள்ள மாட்டார். கண்டிப்பாகவும் அதேநேரத்தில் உறவோடும் பழகக்கூடியவர்.

      எனவே அவருக்கென்று ஒரு தனிமரியாதை எல்லோரிடத்திலும் இருந்தது. நீண்டகாலமாக வழங்கல் பகுதி வாணிபங்களின் கணக்காய்வை அவர் திறம்பட செய்து வந்தார். வழங்கல் பகுதிப் பொறுப்பாளராக அம்மா அண்ணை இருந்து வந்தார்.

      இருப்பு எடுத்தல் தொடங்கி விட்டால் கலைமதி அக்காவை கேட்கவே தேவை இல்லை. “திருவெம்பாவை பாட வெளிக்கிட்டுட்டா” என எல்லோரும் கூறுவார்கள்.

      இரவில் பெற்றோல் மக்ஸ் விளக்கையும் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு கொட்டிலாக பார்ப்பதற்கு கிளம்பி விடுவார்.

      “இந்த மனிசியுடன் குடும்பம் நடத்த இயலாது” என இவருடன் பணி செய்பவர்கள் பகிடிக்கு கூறுவர். இதனையும் ஒரு நாள் அவர் கேட்டு விட்டார். ஆனால் கோபிக்காமல் சிரித்து சமாளித்து வேலை செய்விப்பார்.

      வழங்கல் பகுதி புடவை வாணிபம் சுதந்திரபுரத்தில் தான் இருந்தது. கணக்காய்வுப் பணி நிமித்தம் அங்குள்ள முகாமில் கலைமதி அக்கா மற்றைய போராளிகளுடன் தங்கியிருந்து வந்தார்.

      அதிகாலை புலர்ந்தது. அன்று புதுக்குடியிருப்புக்கு சென்று தனி நபர் வழங்கல் எடுக்கும் நாள்.

      தன்னுடன் துணையாக பணி செய்த போராளியை அங்கு செல்ல அணியமாகுமாறு கூறிவிட்டு தேநீர் தயாரிக்க பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அந்தப் போராளி தயாராகி வந்து பார்த்த போது பாற் சட்டி கருகியிருந்தது. கலைமதி அக்கா அங்கு தான் நின்றவர்.

      ஆனால் அவருக்கு அது தெரியவில்லை.

      1998 ஆனி மாதம் பத்தாம் நாள் அன்று தான் சுதந்திரபுரத்தில் அந்தத் துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தது. திடீரென சிறிலங்கா இராணுவம் அப்பகுதி மீது வான், தரை மற்றும்கடலிலிருந்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடத்தியது.

      அதில் பெருமளவு மக்கள் (33 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்), பல பணியாளர்கள் படுகாயமடைய, பலர் கொல்லப்பட்டனர்.

      யார் நினைத்தார் இப்படி நடக்கும் என்று. அந்தக் கோர நிகழ்வில் எமது கலைமதி அக்காவும் (கப்டன் கலைமதி) அம்மா அண்ணாவும் (லெப்.கேணல் அன்பு/அம்மா) வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

      “புடவை வாணிபம் இல்லாவிடில் தான் இல்லை” எனக் கூறும் எங்கள் கலைமதி அக்கா என்றும் எம் தேச வரலாற்றில் நீங்காமல் நிறைந்திருப்பார்.

      நிலா தமிழ்

      (இந் நினைவுப் பகிர்வுக்குத் தகவல் குறிப்புகள் வழங்கியவர்- விண்ணிலா)