
63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு
வறட்சியான வானிலையால் சிறுபோகத்தில் 63 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விவசாய அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது என சபையின் தலைவர் எம்.பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வறட்சியான வானிலையினால் 64 ஆயிரத்து 342 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்