6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு
Spread the love

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் நேற்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட காணி ஒன்றினை ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளனர்.

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு, 15 பேச் நிலப்பரப்பில் 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்