வழமைக்கு திரும்பும் ரயில் ​சேவைகள்

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Spread the love

வழமைக்கு திரும்பும் ரயில் ​சேவைகள்

ரயில் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாக நேற்று (16) சுமார் 30 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று (17) அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட தூர பயண சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடமைகளுக்கு சமூகமளித்துள்ள சாரதிகளை சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கு பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தாண்டில் சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு வருகை தரவுள்ள பொதுமக்களுக்காக இன்று (17) முதல் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது