லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்

லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்
Spread the love

லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையில் ,இலங்கை அரச இராணுவத்தால் மேற்கொள்ள படும் ,கடத்தல்,கொலை,கற்பழிப்பு ,சித்திரவதை ,மனித உரிமை மீறல்கள் ,அச்சுறுத்தல் என்பனவற்றை நிறுத்த கோரி ,பெண்கள் தினத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது .

இன்று 08|03|2023 மதியம் 13.00 முதல் 15.00மணிவரை இந்த போராட்டம் இடம் பெறுகிறது .கொட்டும் மழையிலும் ,உறை பனி குளிரில் நனைந்த வண்ணம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை காரிகளினால் ,இந்த போராட்டம் முன்னெடுக்க பட்டு வருகிறது .
இலங்கையில் நாள் தோறும் பெண்கள் ,மற்றும் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்

கடந்த தினம் வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ,
மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில்
சடலங்களாக மீட்க பட்டனர் .

மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட நிலையிலும் ,
கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவை மர்ம கும்பலினால் இவ்வாறு ,கொலை செய்ய பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .

நாள் தோறும் நீரேரிகள் ,காடுகள் உள்ளிருந்து ஆண் ,பெண்கள் சடலமாக மீட்க பட்டு வரும் பயங்கரம் இடம்பெற்று வரும் நிலையில் ,
இந்த போராட்டம் இன்று லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெறுள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.