ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு
ரசியாவின் Veretye air force base பகுதியில் தரித்து நின்ற நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகள் மீது நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில், இரண்டு சம்பவ இடத்தில எரிந்து அழிந்துள்ளதுடன் ,மேலும் இரண்டு பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கடந்த முப்பதாம் திகதி நடத்த பட்ட ஏவுகணை தாக்குதல் மூலம் ,பெரும் சேதங்களை தமது இராணுவம் ஏற்படுத்தியுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா நாட்டுக்குள்ளும் ,உக்கிரேன் தொடர்ந்து வருகிறது .
தொடரும் முடிவில்லா போரினால், ரசியா ,உக்கிரேன் இரு தரப்பிற்கும், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .