ரசியா கடற்கரையில் செத்து மிதக்கும் 1700 கடல் விலங்குகள்
ரசியாவின் காஸ்பியன் கடல்பகுதியில் 1700 க்கு மேற்பட்ட கடல் விலங்குகள் இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
இந்த விலங்குகள் ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .
இவை கொலை செய்யப் பட்டதற்கான எவ்வித அடையாளங்களும் காணப்படவில்லை .
மர்மமான முறையில் இறந்து மிதக்கும் இந்த கடல் விலங்குகளுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் ,கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
கெமிக்கல் கலவை கடலில் கலக்க பட்டதால் இவை இறந்திருக்க கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது .