முரசுமோட்டை யில் நபரை தின்ற முதலை

Spread the love

கிளிநொச்சி –முரசுமோட்டை பகுதியில் நபர் ஒருவரை முதலை பிடித்து தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முரசுமோட்டை ஊரியான் குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த நபரையே இவ்வாறு முதலை கொன்று திண்றுள்ளது ,எனினும் அவரது சடலம் மீட்க பட்டுள்ளது .

முரசுமோட்டையை சேர்ந்த சுப்பிரமணியம் நவநீதன் என்ற வாலிபரே இவ்வாறு இறந்துள்ளார் ,

குளத்தில் மீன்பிடிக்க இறங்கிய போது பதுங்கி வந்த முதலை அவரை இழுத்து சென்றுள்ளது ,தந்தையை முதலை இழுத்து செல்வதை இரு மகன்கள் பார்த்த படியே இருந்துள்ளனர் .

சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தின் ,சுழியோடிகள் மூலம் சடலம் மீட்க பட்டுள்ளது .


கிளிநொச்சி –முரசுமோட்டை பகுதியில் நபர் ஒருவரை முதலை கொன்ற இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply