முரசுமோட்டையில் மாணவனை தாக்கி சங்கிலியை அறுத்து சென்ற திருடர்கள்

Spread the love

முரசுமோட்டையில் மாணவனை தாக்கி சங்கிலியை அறுத்துசென்ற திருடர்கள்

கிளிநொச்சி ஏ-35 வீதி முரசுமோட்டை பகுதியில் பொங்கல் சாமான் வாங்கச் சென்ற பாடசாலை மாணவன் உட்பட மூவர் மீது மதுபோதையில் இருந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு

அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்று சென்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ்

நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த மாணவன்உட்பட இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி. ஏ- 35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் பொங்கல் சாமான் வாங்க கடைக்கு சென்ற பாடசாலை மாணவனும்

அவரது சகோதரும் சாமான் வாங்க கடைக்குச் சென்று திரும்பிய சமயம் மது போதையில் இருந்தவர்களால் குறித்த

மாணவன் மீதும் அவரது சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதேவேளை குறித்த சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றும் அறுத்து செல்லப்பட்டுள்ளது.

இதே வேளை தனது பிள்ளைகள் தாக்கப்பட்டது தொடர்பாக கேட்பதற்கு விரும்புகிறார்கள் சென்ற அவர்களது தாய் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவத்தில்

காயமடைந்த பாடசாலை மாணவன் உட்பட 2 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனர்

நமது நிருபர் – சங்கிலியன்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply