முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்
Spread the love

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறக்கோட்டையில் குறித்த அதிகாரிகளால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 5 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய இராஜகிரிய நாவல வீதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​தலங்கம,
கடுவெல, கிராண்ட்பாஸ், கோட்டை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 5 திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (23) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No posts found.