இலங்கையில் –மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
இலங்கை -கடந்த இரவு மாத்தறை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பின் ஒருவராக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி யாகியுள்ளனர் .
வெளியில் சென்ற தந்தை வீட்டுக்கு வராமையால் அவரை தேடி சென்ற தாய் ,தந்தை இவர்களுடன் அவரது மருமகள் ஆகியோரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர் .
சடடவிரோதமாக அமைக்க பட்ட மின்சார வேலியில் சிக்கியே இந்த மூவரும் பலியாகியுள்ளனர் ,வன விலங்குகளிடம் இருந்து தம்மை காப்பாற்றி கொள்ளும்
முகமாக அமைக்க பட்ட மின்சார வேலியில் சிக்கிய இந்த அப்பாவி மூன்று உயிர்களும் பலியாகியுள்ளன .
சம்பவத்தில் உடன் சென்ற மகள் உயிர்சேதம் ,காயங்கள் ஏதும் இன்றி அதிஷ்டவசமாக தப்பியுள்ளார் .
சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .
குறித்த மின்சார வேலியினை அமைத்தவர்கள் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
காட்டு யானைகள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதி உற்று வரும் நிலையில் வன ஜீவராசிகள் அமைச்சு அந்த மக்களுக்கு உரிய பாதுகாப்பபு
வழங்காததன் விளைவே மக்கள் இவ்வாறு திருட்டு தனமாக மின்சார வேலிகளை பாவிக்க காரணம் என தெறிவிக்க படுகிறது .
காட்டு யானைகள் ஊர் மனைக்குள் புகுந்து மக்கள் ,மற்றும் அவர் உடமைகளை சேத படுத்தி செல்கிறது .
இந்த கொடிய விலங்குகளிடம் இருந்து தம்மை பாதுகாக்குமாறு மக்கள் விடுதஅவசர கோரிக் கைகள்
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் தட்டி கழித்ததன் விளைவே இந்த உயிர் பலிக்கு காரணமாக அமைந்துள்ளது .
இனியேனும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மக்கள் வாழ்வுரிமையை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவார்களா ..?
ஆளும் மக்கள் ஆட்சி சோசலிய குடியரசாக விளங்கும் ஆளும் கோட்டபாய அரசு இந்த விடயத்தில் கவனமெடுத்து மக்களை காப்பாற்றுமா ..?
பழிவாங்கும் அரசியல் அநகாரிக சேவை இயல் கலைந்து ,மனித நெறியுடன் கூடிய செயல்பாட்டுடன் இயங்குமா ..?
மகிந்த காலத்தில் இருந்து இந்த மின்சார வேலி அமைக்கும் செயல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது .