மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!
இலங்கையில் 10-24 வயதுடையவர்களில், 39 வீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோய்களின் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, நாட்டிற்குள் உள்ள மனநலப் பிரச்சினையின் அளவை எடுத்துக்காட்டும் ஆபத்தான புள்ளிவிபரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று 20 வருட காலப்பகுதியில் 52,000 இலங்கையர்கள் உட்பட 33 ஆய்வுகளை மதிப்பீடு செய்து இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.