மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை
இலங்கை நாவலபிட்டியை சேர்ந்த முஸ்லீம் தந்தை ஒருவர் தனது மகளின் திருமண நாளன்று பலியாகியுள்ளார் .
திருமண மண்டபத்திற்கு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த, 62 வயது தந்தை ,மோட்டார் சைக்கிள் செலுத்தி கொண்டிருந்தார் .
அப்பொழுது நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார் .மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் எதிர் திசையில் பயணித்துள்ளார் .
இதனை கண்காணித்த காவல்துறையினர் ,அவரை வழிமறித்து ,ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் மனைவி கண்முன்னே கணவன் இறந்து விட்டார் .
இந்த சம்பவம் திருமண தம்பதிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .