பிரிகேடியர் தீபன் ,தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய தளபதிகளாக விளங்கிய பிரிகேடியர் தீபன் மற்றும் லெப்கேணல் தீபன் ஆகியோரது தந்தை அவர்கள் மரணமானார் .
ஈழ விடுதலை போருக்கு முக்கிய தளபதிகளை தந்து ,மக்களையும் மண்ணையும் நேசித்த மிக பெரும் ஆதரவாளர் .
போராடத்திற்கே தம்மை அர்ப்பணித்த வீர விடுதலை குடும்பம் .
அவ்விதமான வீர தந்தை இன்று எம்முடன் இல்லை .
தமிழீழ விடுதலை புலிகள் மண்ணில் ஆண்டிருந்தால் ,இந்த தந்தை இறுதி நிகழ்வு தமிழீழம எங்கும் களைகட்டி இருக்கும் .
ஆனால் தமிழ் தேசியம் கேப்சும் நமது ஊடகங்கள் இவரை மறந்துள்ளன .
காலம் கடந்து போகலாம் ,ஆனால் அந்த காலத்தில் நடக்கும் ,தட்டி கழிப்புக்களும் ,காட்டி கொடுப்புகளும் ,அவமதிப்புகளும் ,தமிழர் நெஞ்சங்களில் இருந்து அழிந்து போகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
.
வீர தந்தத்தையே வீராசாமி உறங்கு .தமிழாம் உன் பெயர் நாளை சொல்லும் .
வீர வணக்கம் .
பிரிகேடியர் தீபன் ,தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம்
அமரர்.திரு. கந்தையா வேலாயுதபிள்ளை
மண்ணில் -1937.09.14
விண்ணில் -2022.12.09
யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைப் பிறப்பிடமாகவும் கண்டாவளை, வரணி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட, திரு. கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் 2022.12.09 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை மண இணையரின் பாசமிகு மகனும், கண்டாவளையைச் சேர்ந்த, காலஞ்சென்ற சித்தர் குமாரவேலு, சின்னப்பிள்ளை மண இணையரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பராசக்தியின் பாசமிகு கணவரும்,
விஜயகுமார் (இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முன்னாள் நடத்துனர்), சுகுணகுமாரி, வேணுகுமாரி (முன்னாள் ஆசிரியை, கிளி/முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி), காலஞ்சென்ற பகீரதகுமார் ( மூத்த தளபதி பிரிகேடியர் தீபன்), மற்றும் சிவஞானகுமாரி (ஆசிரியை- யா/வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற சிவகுமார் (லெப்.கேணல்.கில்மன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனந்தநீலா, அனந்தசேகரன், லோகநாதன், குமாரி, சிறீதரன் (பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்)
ஆகியோரின் மாமனாரும்,
கோபினா, கோபிசன், அனோஜா, சிறிதரன், அஜிந்த், கீர்த்தனா, அருணியா, அஜந்தூரன், லக்சன், லக்சனா, சாரங்கன், பிரணவன், பிரவீனன், ஆர்த்தி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு பேரனும், அஞ்சனா, ஆசா, அஸ்மி, அகானா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில், முரசுமோட்டையில் அமைந்துள்ள அவரது மூத்தமகனின் இல்லத்தில் நடைபெற்று (முருகானந்தா கல்லூரிக்கு முன்னால்), பூதவுடல் தகனக்கிரியைக்காக, அன்னாரின் குடும்ப மயானமான யாழ் வரணி-குடமியன் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.