பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்
Spread the love

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

மலேசியா நாட்டின் தெற்கு கடற்கரையில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென தீ பிடித்து கொண்டது .

தீப்பிடித்த எண்ணெய் டேங்கரில் இருந்து ஊழியர்கள் கடலில் குதித்தனர் ,
அருகில் பயணித்த மூன்று கப்பல்கள் 25 பேரை காப்பாற்றியது ,ஆனால் தொடர்ந்து மூன்று பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர் .

காணாமல் போன மூவரை தேடி இராணுவம் , கடல் படை என்பன
இணைந்து தேடுதலை நடத்தி வருகின்றன .

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

கப்பல் தீ பிடித்த பொழுதும் அருகில் பயணித்த கப்பல்களுக்கு,
தீ பரவல் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

சீனாவில் இருந்து சிங்கப்பூர் பயணித்த கப்பலில்,
தீ விபத்து ஏற்பட்டபோது, ​​அடர்த்தியான, கரும் புகை சூழ்ந்ததாக ,
மலேசிய கடல் சார் அமுலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .