நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Spread the love

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது

ஹெம்மாவத்தகம பனிய நீர் திட்டத்திற்கு சொந்தமான அரநாயக்கவில் உள்ள அசுபினியெல்ல நீர் திட்டத்தின் நீர் குழாய்களுக்கு தீ வைத்த பாடசாலை மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த தீ விபத்து தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது

பாடசாலை முடிந்தவுடன் நீர்த்தேக்க குழாய்கள் அமைந்துள்ள பிரதேசத்திற்கு குறித்த மாணவர்கள் புகைபிடிக்கச் சென்றுள்ளனர். புகைபிடிக்க பயன்படுத்திய தீக்குச்சியிலிருந்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆறு சிறுவர்களில் ஐவர் நாளைய தினம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற வேண்டியவர்களாவர்.