தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள்

தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள்
Spread the love

தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள்

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும், அதுவும் தோல்வியுற்றால்

நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக யார் மூக்கை நுழைத்தாலும் பொருட்படுத்தாது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள்

வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி மக்களை அடைத்து வைக்கும் நபர்களுக்கும் குழுக்களுக்கும் எதிராக மக்கள் கிராம மட்டத்தில் நிற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இன்று (2) ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி உடுகம்பொலவில் உள்ள தனது வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் இதற்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

கேள்வி: நீங்கள் இதற்கு முன்னரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்திருக்கிறீர்கள். இன்று ஏன் வந்தீர்கள்?

பதில்- கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வீடு எரிப்பு சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான மேலதிக வேலைகளுக்காக இன்று வருமாறு கூறி இருந்தார்கள்.

கேள்வி- இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதா?

பதில்- வீடுகளை எரித்ததன் மூலம் எங்களின் மனித உரிமைகள் மீறப்பட்டன. காலிமுகத் திடல் போராட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இந்த சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பாதுகாப்பு சபையினால் இது நடக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் தேவையான முடிவுகள் எடுக்கப்படவில்லை.குறைந்த பட்சம் எங்களின் வீடுகள் தீப்பற்றி எரியும் போது பாதுகாப்பு படையினர் குறைந்தபட்ச பலத்தை கூட பயன்படுத்தவில்லை.