தொடரும் மனித உரிமைகள் எப்போது முடியும் கேள்வி கணைகளால் துளைத்த இலங்கை தூதரகம் -படங்கள் உள்ளே

Spread the love

தொடரும் மனித உரிமைகள் எப்போது முடியும் கேள்வி கணைகளால் துளைத்த இலங்கை தூதரகம் -படங்கள் உள்ளே

இன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் இலங்கை இனவாத அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டி காட்டி,
குற்றங்களை உடனடியாக நிறுத்த கோரி ஒரு போராட்டத்தை தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . , (10:12:2021 )வெள்ளி கிழமை மதியம் 12:30 மணியளவில் அமைதியான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் .போராட்டத்தில் .
தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அரசாங்கத்தை தமிழர்களுக்கு சரியான நீதி கிடைக்க பல கோரிக்கை களை முன்வைத்து கோவிட் விதிகளை பின் பற்றி செய்வனவே செய்திருந்தனர் .
இதன்போது

போலி என்கவுன்டர்களை அரங்கேற்றுவதை நிறுத்துங்கள்

ஆதிக்கம் செலுத்தும் தமிழ் பகுதிகளில் உள்ள அதிகப்படியான ராணுவத்தை அகற்றவும்,

போரின் விதவைகளை மிரட்டி பணம் பறிப்பதையும் பாலியல் துன்புறுத்தலையும் நிறுத்து

தமிழர்களை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ விடுங்கள்

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இனவெறியை ஊக்குவிக்காதீர்கள்

ஆதிக்கம் செலுத்தும் தமிழ் பகுதிகளில் அதீத இராணுவத்தின் இருப்பை அகற்றவும்

இலங்கையின் இறையாண்மையை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டாம்

ஓரினச்சேர்க்கை பாலியல் சித்திரவதை செய்யாதீர்கள்

PTA ஐ உடனடியாக ரத்து செய்

போதை மருந்துகள் தமிழ் மண்ணிற்குள் வருவதை நிறுத்து

அப்பாவி அரசியல் கைதிகளை விடுதலை செய்.

என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்களாக முழங்க
பட்டது .

Author: நலன் விரும்பி

Leave a Reply