சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு

யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது
Spread the love

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு

சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) காலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.

இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமுக்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.