கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
Spread the love

கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள், இன்று (03) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

“கிளிநொச்சி சாலையின் வருமானத்தை பாதிக்கும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு, புல்மேட்டை ஊடாக திருகோணமலைக்குச் செல்லும் தமது பஸ்களுக்கு முன்னால் விசுவமடுவில் இருந்து திருகோணமலைக்கு செல்லும் தனியாருக்கு சேவையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

“இதுவரை காலமும் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு சேவையாற்றும் படி கோரிக்கைகள் இருந்தும் இதுவரை இ.போ.சக்கு அனுமதி

வழங்கப்படவில்லை” என்ற விடயங்களை சுட்டிக்காட்டியே குறித்த பணிப் பகிஷ்கரிப்பில் இன்று காலை
முதல் கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No posts found.