காதலரை கரம் பிடித்தார் ஒஸ்தி நடிகை

Spread the love

காதலரை கரம் பிடித்தார் ஒஸ்தி நடிகை

தெலுங்கு சினிமாவில் 2010-ல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்

நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’

படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.

அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க

சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு

படங்களிலுமே அவருடைய நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.

ரிச்சாவின் திருமண புகைப்படம்

அதன்பின் பலமுறை மீண்டும் அவர் நடிக்க வருகிறார் என்ற செய்தி வந்தபோதெல்லாம் அவற்றை மறுத்தார். இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க காதலர் ஜோ

லாங்கெல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய திருமணம் அமெரிக்கா மற்றும் பெங்காலி முறையில் நடைபெற்றது.

Leave a Reply