கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
Spread the love

கவனயீர்ப்பு போராட்டம்

வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடி சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மத்தியகிழக்கு நாடுகளும் தொழிலுக்காக சென்று நிர்க்கதியான பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதுடன் போலி முகவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.