கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

Spread the love

கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

கனடாவில் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி
துப்பாக்கிச்சூடு நடந்த இடம்
ஒட்டாவா:

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஒரு

பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் உயிருக்கு

போராடிக்கொண்டிருந்தார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை.

இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் இந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதலுடன்

தொடர்புடையது அல்ல என்றும் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply