கண்டி மாவட்டத்தில் 14 மணிநேர நீர் விநியோகத்தடை

Spread the love

கண்டி மாவட்டத்தில் 14 மணிநேர நீர் விநியோகத்தடை

கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை ,14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 13ஆம் திகதி (13.09.2022) மு.ப. 6 மணி

முதல் பி.ப. 8 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என சபை அறிவித்துள்ளது.

ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான ஆகிய பகுதிகள் நீர்

விநியோத் தடையினால் பாதிக்கப்படும். இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற தொலைபேசி துரித இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply