ஒரே நாளில் மூவர் படுகொலை

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Spread the love

ஒரே நாளில் மூவர் படுகொலை

நாட்டில் நேற்றைய தினம் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு நீண்டதில் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த 47 வயதுடைய நபர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர், வீட்டில் இருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் மூவர் படுகொலை

இதேவேளை யாழ்ப்பாணம் அத்தியடி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவர் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இக்கொலையை செய்துவிட்டு வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.