ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

Spread the love

ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.

இதன்போது ஆபிரிக்கா சார்பாக காங்கோ, காம்பியா, மொராக்கோ, செனகல், உகாண்டா, சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகளுக்கு பொலிவியாவின் ப்ளூரினேஷனல் ஸ்டேட், சுரினாம் போன்ற நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஐ.ந. பொதுச் சபையின் 78வது அமர்விற்கு துணைத் தலைவர்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களுக்கு ஐஸ்லாந்து, நெதர்லாந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைமை நாடுகள், ஐ.நா.பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
Home » Welcome to ethiri .com » ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!
Home » Welcome to ethiri .com » ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

Author: நலன் விரும்பி