பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

Spread the love

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா
செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் ஆவார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன்.

நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்கிறேன்.
நான் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளேன். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும்

செலுத்தி உள்ளேன். லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டில் இருந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று அதில் ஸ்டீபன் துஜாரிக் குறிப்பிட்டுள்ளார்

    Leave a Reply