ஈரானில் மாணவர்கள் மீது இஸ்ரேல் நச்சு வாயு தாக்குதல்

ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
Spread the love

ஈரானில் மாணவர்கள் மீது இஸ்ரேல் நச்சு வாயு தாக்குதல்

ஈரானில் ஆயிரக்கணக்கான மாணவர்களை நோய்வாய்ப்படுத்திய மர்மமான,
நச்சுத் தாக்குதல்களின் சமீபத்திய அலையின் பின்னர்,
தற்போது இருபது ஈரானிய பள்ளி மாணவிகள் செவ்வாயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தின் தலைநகரான,
தப்ரிஸில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ,சிறுமிகள் சிகிச்சை பெற்றதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

நவம்பர் பிற் பகுதியில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ,
மயக்கம், குமட்டல், மூச்சுத் திணறல் மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களால் ,
பாதிக்கப்பட்டனர்

சுமார் 230 பள்ளிகளில் விவரிக்கப்படாத தாக்குதல்கள் மாணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்புலத்தில் ,இஸ்ரேல் உள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது .