இராணுவ சிப்பாயிடம் துப்பாக்கி பறித்து சென்ற திருடர்கள்

Spread the love

இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்ட துப்பாக்கி கெக்கிராவையில் இருந்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

போகஸ்வெவ இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் .

இன்று (25) அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதோடு அவரின் துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டிருந்தது.

சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் சிகிச்சைக்காக அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply