இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்
ஆப்கானிஸ்தானில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ,அரச இராணுவத்தினர் நாற்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 165 தலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
ஆனால் தாலிபான்களோ அரச இராணுவத்தில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலி என தெரிவித்துள்ளனர்
குறித்த நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் விலகி வரும் நிலையில் அங்கு தலிபான்கள் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது