
யேசுதாஸ் மகன் விஜய் வீட்டிலும் 60 சவரன் தங்கம் வைர நகைகள் மாயம்
பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் வீட்டிலும் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என அவருடைய மனைவி தர்ஷனா பாலா சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலாவுடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த யேசுதாஸ் மருமகள் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார்.