யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: தையிட்டியில் பதற்றம்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: தையிட்டியில் பதற்றம்
Spread the love

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: தையிட்டியில் பதற்றம்

யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று இரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

மேலும் குறித்த பகுதிக்குள் உள்நுழைய முடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்திருந்ததுடன், அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுக்கூடியதுடன், பதற்றமான சூழல் நிலவியிருந்தது