யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்
Spread the love

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்றிரவு (25) இனந்தெரியாத குழு வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பல் தப்பிச் சென்ற நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்