யாழில் திடீரென பற்றி எரிந்த விருந்தினர் விடுதி

யாழில் திடீரென பற்றி எரிந்த விருந்தினர் விடுதி
Spread the love

யாழில் திடீரென பற்றி எரிந்த விருந்தினர் விடுதி

யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மின்னொழுக்கே குறித்த தீ விபத்துக்கு காரணமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுமார் எட்டுலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது