
யானையுடன் கொழும்பில் போராட்டம்
யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி பல சிவில் அமைப்புக்கள் மற்றும்
சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை புதன்கிழமை (18) காலை நடத்தியது.
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகளுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு எனவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்
எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.
யானையுடன் கொழும்பில் போராட்டம்
யானைகள் – மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை
பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிய யானையொன்றையும் நிர்மாணித்து,
போட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்றுக்கு அருகில் பதற்றம்
- மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
- இறந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டேன் சஜித்
- 75 குடும்பங்களுக்கு பாதிப்பு
- இராணுவ கவச அங்கிகள் மீட்பு
- 7 லட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்
- 2600 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்
- சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை
- 80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்
- வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதை நீதி கேட்டு யாழில் போராட்டம்