முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்
Spread the love

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, பொரளையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது. போராட்டம் காரணமாக பொரளை சுற்றுவட்டாரத்திற்கு அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.