முள்ளிவாய்க்கால் நினைவுப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன

முள்ளிவாய்க்கால் நினைவுப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
Spread the love

முள்ளிவாய்க்கால் நினைவுப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்தும் மே 18 முள்ளிவாய்க்கல் நினைவு வாரத்தை

முன்னிட்டு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய நுழைவாயில் பிரதான வீதிக்கு அருகில் முள்ளிவாய்க்கால் பேரவலத்து நினைவுப் பதாதைகள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

வருகை தந்த பாடசாலை மாணவர்கள் நினைவு புகைப்படங்களை பார்வையிட்டதுடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மாணவர்கள் மத்தியில் நினைவு உரையை நிகழ்த்தினார்.

முள்ளிவாய்க்கால் நினைவுப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இடம் நிகழ்வுகளுக்கு தமிழராய் இணைவோம் தமிழரின் பேரவலம் உணர்வோம் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகள் செய்வோம் திரண்டு வாருங்கள் என

பொதுமக்கள், ஆலய நிருவாகங்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், வர்த்தக

சங்கங்கள், ஆட்டோ சங்கத்தினர், சமூக அக்கறையாளர்கள் அரசியல் கட்சி பேதங்களுக்கப்பால் அனைத்து அரசியல்வாதிகளையும் அன்புரிமையுடன் இணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.