
மற்றுமொரு துப்பாக்கிச்சூடு
மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.