
புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கைது
கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டச் சென்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மிரிஹான பிரதான பொலிஸ் பரிசோதகர் என தெரிவிக்கப்படுகின்றது.