
பிரான்சில் சிறந்த சமையல்காரனாக தெரிவான தமிழர்
பிரான்ஸ் பரிசில் இடம்பெற்ற உணவு தயாரிப்பாளார்கள் போட்டி நிகழ்வில் ,இலங்கையை சேர்ந்த தரசன் செல்வராஜா என்ற தமிழர் வெற்றியை பெற்று நான்காயிரம் யூரோ பணத்தை தட்டி சென்றுள்ளார் .
மேலும் இவர் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகைக்கு, உணவுகளை வழங்குவதற்கும் ,அனுமதிக்க பட்டுள்ளார் .
தான் தயாரிக்கும் உணவுகளை பிரான்ஸ் ஜனாதிபதி சுவைப்பராயின் ,
அதைவிட மகிழ்ச்சி வேறு ஏதும் இல்லை என அவர் தெரிவித்து ,மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்துளளார் ,
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் ,அதனை ரசித்து ருசித்து செய்த,
கொள்கையால் இன்று ,பிரான்சில் சிற்றுண்டி சாலைகளின் உணவுகள் தயாரிப்பில்,முதலிடம் பிடித்து சாதனை படைத்து, தான் பிறந்த நாட்டுக்கு,
பெருமை சேர்த்துள்ளார் இந்த தமிழன் .