பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்
Spread the love

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்

பாகிஸ்தானின் குவெட்டாவில் பகுதியில்
போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து பயங்கர குண்டுவெடிப்பு
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பொலிஸ் வாகனங்களை குறிவைத்து இரண்டு மணிநேர இடைவெளியில் ,
சாலையோரத்தில் மறைத்து வைக்க பட்ட குண்டுகள் வெடித்து சிதறின .

இந்த குண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்,
மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரில் திங்களன்று நடந்த முதல் தாக்குதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்


சில மணி நேரங்களுக்குப் பிறகு, நகரில் மற்றொரு வெடிகுண்டு
போலீஸ் வாகனம் அருகே வெடித்தது,
நான்கு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்..

சமீப நாட்களாக இவ்வாறான குண்டு வெடிப்பு தாக்குதல்கள்
அதிகரித்து காணப்படுகின்றன .