துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
Spread the love

துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ,பிரிந்த தாயும் சிசுவும்,
ஒன்றாக இணைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது .

Vetin என்று அழைக்கப்படும் மூன்றரை மாத வயதுடைய அதிசயக் குழந்தை,
பிப்ரவரி 6 நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு,
எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல், Hatay மாகாணத்தில் ஒரு கட்டிடத்தின்,இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

பேரழிவு நடந்த 54 நாட்களுக்குப் பிறகு ,
அதானா நகரில் உள்ள மருத்துவமனையில் ,
அவரது தாயார் யாசெமின் பெக்தாஸ் சிகிச்சை பெற்று வந்தார் ,
அவருடன் சிசு ஒப்படைக்க பட்டுள்ள அதிசயம் நடந்துள்ளது .

ஒரு தாயையும் அவரது குழந்தையையும் ,
மீண்டும் இணைப்பது உலகின் மிக மதிப்புமிக்க பணிகளில் ஒன்றாகும்,
என்று குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டெரியா யானிக் தெரிவித்தார் .